பேலியகொட நகர சபையின் உறுப்பினரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!
பேலியகொட நகர சபையின் உறுப்பினர் சாமில சந்தருவான் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தடல்ல மஞ்சுல எனப்படும் டி.மஞ்சு (வயது 27) என்பவர் பேலியகொட விசேட வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க - ஆடி அம்பலம பிரதேசத்தில் வைத்து 21ம் திகதி இரவு குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை தொடர்பில் பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வரும் நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேபநபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
0 comments :
Post a Comment