Sunday, May 25, 2014

சின்ன வயதில் சிதைக்கப்பட்ட இன்னொரு பல்கலை மாணவி! நேற்றைய சோகம் மறையும் முன்னே இன்றும் ஒரு வேதனை!

பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப் படிப்பினை மேற்கொண்டுவரும் இன்னும் ஒரு பல்கலைக்கழக மாணவி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

லலனி நதீஷா என்ற இந்த 22 வயதான மாணவி, மாத்தளை - வராப்பிட்டிவலில் உள்ள தனது வீட்டில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது நேற்றிரவு காணாமல் போயிருந்தார்.

காலையில் அவரைத் தேடியபோது அவரது சடலம் அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள தோட்டத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்தக் கொலை தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. காரணம் கூட இதுவரை அறியப்படாத நிலையிலேயே உள்ளது.

இவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டே கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com