Monday, May 12, 2014

BBS ஐக் கண்டு ஓடவில்லை… புதையல் கொள்ளையர்களைப் பிடிக்கவே பொலிஸ் ஜீப்கள் பறந்தன…

நேற்று முன்தினம் பொதுபல சேனா அமைப்பினர் வருகைதரும் போது, கிராதுரு கோட்டை தொல்பொருள் பாதுகாப்பிடத்தில் அனுமதியின்றி தோண்டும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு பொலிஸ் ஜீப்களும் பயந்து செல்லவில்லை எனவும், அந்நிலத்தைச் சுற்றிவளைத்திருந்தது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

அங்கிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய பொருட்கள் பலவற்றை கைப்பற்றியுள்ளதாகவும், அனுமதியின்றி அந்நிலத்தைத் தோண்டியவர்களைக் கைது செய்ய முடியாமற் போனதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பொது பல சோனா அமைப்பு, நேற்று முன்தினம் அவர்களைக் கண்டே பொலிஸார் அவ்விடத்தை விட்டும் நீங்கிச் சென்றதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com