Friday, May 9, 2014

"இறந்த நிலையில் பிறந்த குழந்தை" 6 நாட்களின்பின் உயிர் பெற்ற சம்பவம் குருணாகலில்........

உயிரிழந்த நிலையில் பிறந்ததாக கூறப்படும் குழந்தையொன்று ஆறு நாட்களுக்கு பின்னர் மீண்டும் உயிர்பெற்ற ஆச்சரியமான சம்பவம் ஒன்று குருணாகல் வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது. ஆனமடுவை பிரதேசத்தைச் சேர்ந்த சமிலா சந்தனி ஜயதிலக்கவே கடந்த 30 ஆம் திகதி குறித்த குழந் தையை பிரசவித்தார். இந்தக் குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனால், குழந்தை இறுதிக்கிரிகைகளை பெற்றோர் ஏற்பாடு செய்து கொண்டிருந்த வேளையிலேயே வைத்தியசாலையிலிருந்து குழந்தை உயிருடன் இருக்கும் தகவல் பெற்றோருக்கு நேற்று புதன்கிமை கிடைத்துள்ளது. குறித்த குழந்தை பிறந்த தினத்தில் தாதிமார் வேலை நிறுத்தம் சூடுபிடித்த நிலையிலிருந்தது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com