போர் வெற்றி விழா நிகழ்வை முன்னிட்டு நடாத்திய தேடுதல் வேட்டையில் 20 முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது!
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தை சேர்ந்த 20 பேர் தென் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தென் பகுதியில் வீதி நிர்மாணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்கள் “உணெல்ல” என்ற பகுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கியிருந்து தொழிலுக்கு சென்று வந்துள்ளனர்.
மாத்தறையில் நாளை நடைபெறவுள்ள போர் வெற்றி நிகழ்வை முன்னிட்டு மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எனவும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்து தப்பி வந்தவர்கள் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment