Sunday, May 11, 2014

18 வயது இளைஞனின் மரணம் தொடர்பில் 7 பொலிஸார் கைது!

கடந்த 7ஆம் திகதி புதையல் அகழும் தோரணையில் காட்டுப் பிரதேசத்துக்குள் நுழைந்த ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் சுற்றுலா நீதவான் நீதிமன்றின் முன் ஆஜர்படுத்தப்படபோது விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் இதற்கிணங்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பதுளை, கன்தெகெடிய பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் 7 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 7 பேரும் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 23ஆ திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் 18 வயதான இளைஞன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக இவ் இளைஞன் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சடலம் மீதான பிரேத பரிசோதனையின் போது, தாக்குதல் காரணமாகவே குறித்த சந்தேகநபர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதன் பின்னதாக குறித்த சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர், கான்ஸ்டபிள் இருவர், சிவில் அதிகாரி ஒருவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com