Friday, April 11, 2014

80 லட்சம் நிதி மோசடி செய்த ஒன்பது பேர் கைது !!

போலி ஆவணங்கள் தயாரித்து 80 லட்சம் ரூபா நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் 9 சந்தேகநபர்கள் கல்கிஸ்ஸ பிரதே சத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்து 102 இறப்பர் முத்திரைகள், ஆட்பதிவு திணைக்களம் என்று கூறப்பட்டுள்ள 10 அட்டைகள், போலி அடையாள அட்டைகள் 04, மடிக்கணினி மற்றும் கார் போன்றவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படுத்தப்பட்டு 16ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com