Tuesday, March 25, 2014

ஜெனீவா பிரேரணை போல ஆயிரம் வந்தாலும் ஒன்றையும் நான் கருத்திற் கொள்ள மாட்டேன்...! - ஜனாதிபதி

குறித்த தினத்திலன்றி அதற்கு முன்னரோ பின்னரோ தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும், 2016 ஆம் ஆண்டு வரை எந்தவொரு தேர்தலும் நடத்தப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.

கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக மாளிகாவத்தை ஜீ.டீ. சிரிசேன விளையாட்டுத் திடலில் இடம்பெற்ற கூட்டத்தின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

“பலமற்ற, கனவு காண்கின்ற சிலர் வெற்றி பெறுவதற்காக பிறநாடுகளின் உதவியை நாடுகின்றனர். வெற்றியை நிச்சயப்படுத்துவதற்காக நாட்டைக் காட்டிக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருக்கின்றார்கள். ஜெனீவா பிரேரணையல்ல.. அது போன்ற ஆயிரம் வந்தாலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் அவற்றைக் கருத்திற் கொள்ள மாட்டேன். நான் இந்நாட்டு மக்கள் மீது மட்டுமே நம்பிக்கை வைத்திருக்கிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com