Monday, March 24, 2014

பேராதனை பல்கலை வைத்திய பீட மாணவி 2 முறையாகவும் தற்கொலைக்கு முயற்சி!

கண்டி வாவியில் விழுந்து தற்கொலை செய்ய முயன்ற குருநாகல் பகுதியைச் சேர்ந்த பேராதனை பல்கலைக்கழக வைத்திய பீட மாணவி ஒருவர் பொலிசாரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.


சம்பவம் குறித்து தெரியவருவதாவது நேற்று மாலை வாவியில் மாணவி பாய்வதை நேரில் கண்ட இராணுவ சிப்பாய் கண்டி பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து மாணவி காப்பாற்றப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த இந்த மாணவி இதற்கு முன்னரும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com