Friday, January 10, 2014

தமிழ் -சிங்­கள மக்­களின் ஒற்­று­மையை சீர் குலைப்பதுடன் தேசத்துரோக செயலில் ஈடுபடும் யாழ். மன்னார் ஆயர்களை கைது செய்ய- பொது­ப­ல­சே­னா

தமிழ் -சிங்­கள மக்­களின் ஒற்­று­மையை சீர் குலைக்கும் ஆயர்களின் சதியை இந்து தலைவர்கள் புரிந்த கொள்ள வேண்டும் என்பதுடன் தேசத்­து­ரோக செயலில் ஈடு­படும் மன்னார் மற்றும் யாழ். கத்­தோ­லிக்க ஆயர்­களை உடனடியாக கைது செய்ய அர­சாங்கம் நடவடிக்கை­களை எடுக்க வேண்டும் என பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செயலாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் இறுதிக்கட்ட யுத்­தத்தின் போது இரா­ணுவம்மக்கள் மீது இர­சா­யன ஆயுத தாக்­குதல், கொத்து குண்­டு­களை போட்­ட­தாகவும் எனவே சர்­வ­தேச விசா­ரணை தேவை­யென்றும் அமெ­ரிக்க விசேட பிர­தி­நிதி ஸ் ரீபன் ரெப்­பிடம் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் மற்றும் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோர் தெரி­வித்­தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையி­லேயே பொதுபலசேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் இதனைத் தெரி­வித்தார்.

இதே வேளை இலங்­கையில் தமிழ் இந்து சமூ­கத்­தினர் நூற்­றுக்கு 95வீதம் வாழ்­கின்­றனர் அதில் வடித்­தெ­டுத்த சிறு­தொகை தமிழ் மக்கள்தான் கத்தோலிக்கர்களா­கவும் கிறிஸ்தவர்களாகவும் உள்­ளனர் அவ்வாறானதோர் நிலையில் இந்த இரண்டு ஆயர்­களும் மேற்­குல நாடு­களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப பிர­பா­கரன் இருந்த காலத்­திலும் இன்றும் தமது நடவடிக்கைகளை கைவிடாது முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

மேலும் ஒன்­று­பட்ட இலங்­கையை, மக்­களை மீண்டும் பிள­வு­ப­டுத்த இவர்கள் முயற்­சிப்பதுடன் இலங்கையில் மீண்டும் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­து­வதே இவர்­களின் இலக்­காக காணப்படுகிறது எனவே இதனை தமிழ் இந்துத் தலைவர்கள் புரிந்து கொண்டு தமது செயற்பாடுகளை முன்­னெ­டுக்க வேண்டும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


1 comments :

Arya ,  January 10, 2014 at 12:17 PM  

இவர் சொல்வது உண்மை, நாட்டை அந்நியர்களிடம் காட்டி கொடுக்கும் இவனை போன்ற சகல மேற்கத்தைய உளவாளிகளையும் கைது செய்ய வேண்டும். இவன் மத குரு அல்ல பாதர் அங்கி போட்ட கிரிமினல்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com