Tuesday, January 21, 2014

ஆழ்கடலில் சுவாசிப்பதற்கு என புதிய உபகரணம் கண்டுபிடிப்பு!

மீன்­களின் சுவாசக் கட்­ட­மைப்பு போன்று செயற்­படும் ‘திரைட்டன்’ என அழைக்­கப்­படும் மீன்­களைப் போன்று நீரி­லி­ருந்து ஒட்­சிசன் வாயுவை பெற்று சுவா­சிக்க உதவும் முக­மூடி உப­க­ர­ண­மொன்றை தென் கொரிய வடிவமைப்­பாளர் ஒருவர் உரு­வாக்கி சாதனை படைத்­துள்ளார்.



இந்தப் புதிய உப­க­ரணம் ஆழ்கடலில் ஒட்­சிசன் கொள்க­லனின் உத­வி­யின்றி நீரிலி­ருந்தே ஒட்­சி­சனைப் பெற்று சுவா­சிக்க வழிவகை செய்­கி­றது.

மேலும் ஜிய­பையுன் யியோன் என்­ப­வரால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள இந்த உபகர­ணத்­தி­லுள்ள நுண் காற்­ற­ழுத்தக் கருவிகள் கடல் நீரி­லி­ருந்து ஒட்­சி­சனை வேறுபிரித்து அகத்­து­றிஞ்சி பயன்­பாட்­டா­ள­ருக்கு வழங்­கு­வதுடன் இந்த கருவி தேவைக்கு மேலதிகமாக அகத்துறிஞ்சப்படும் ஒட்சிசனை அந்த உபகரணத்துடன் இணைக்கப்பட்ட சிறிய தாங்கியில் சேமிக்கத்தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேற்­படி உப­க­ரணம் வழ­மை­யான மின்­னேற்ற பற்றரிகளிலும் பார்க்க 30 மடங்கு சிறிய நுண் பற்­ற­ரியால் சக்தியூட்­டப்­பட்டு செயற்­ப­டு­கின்­ற போதும் இந்தபுதிய கண்டுப்பிடிப்பு முழுமைபெற்று பாவனைக்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு சிறிதுகாலம் தேவைப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com