Friday, December 6, 2013

தட்டை வைத்து பிச்சை எடுப்பதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்-டிலான் பெரெரா!

தட்டை வைத்து பிச்சையெடுப்பதை போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காது அரசியல் பிழைப்பு நடாத்துகின்றது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரெரா அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் அன்றும் இன்றும் என்றும் ஒரே நிலைப்பாடுதான் இருக்கிறது அதில் எவ்வித மாற்றமும் இல்லை.

அதாவது 13 ஆவது திருத்தம் தொடர்பில் சிறந்தவொரு முடிவை எடுப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவே சிறந்ததொரு இடமாகும் ஆனால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுத்து நாட்டில் நிலவும் தேசியப் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெறுவதற்கு முன்வருவதில்லை இதற்கு காரணம் தெரிவுக்ழுவிற்கு வந்து அரசியல் தீர்வொன்றை பெற்றுவிட்டால் அதன்பின் தமிழ்க் தேசியக் கூட்டமைப்பினரால் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும் என்பதுதான் எனக்குறிப்பிட்டார்.

மேலும் 13 பிளஸ்சோ அல்லது மைனஸ்சோ என எதுவாக இருந்தாலும் இது தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தான் பேசி தீர்க்க வேண்டும் அதனை விடுத்து வெளியிலிருந்து கொண்டு அதனை விமர்சனம் செய்யக்கூடாது என்னக்குறிப்பிட்டார்.

இதனைவிட ஒருவிடையம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொண்டு நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் விரும்புவது இல்லை இதற்கு காரணம் அவ்வாறு வந்து பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டால் அவர்களால் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும் என்பதுதான் எனக்குறிப்பிட்டார்.

காரணம் நாட்டில் நடைபெறும் தேர்தல் காலங்களில் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்பிரச்சினைகளை வைத்தே தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதோடு விமர்சனங்களையும் முன்வைப்பர் அதனை நம்பி மக்களும் வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றிபெற்றதும் அடுத்த ஐந்து வருடங்களுக்கு வெளிநாடுகளில் சுற்றிதிரிந்து குறைகூறி வந்து மீண்டும் தேர்தலுக்கு ஆயத்தமாவார்கள் இதுவே இவர்களுடைய அரசியல் என தெரிவித்தார்.

3 comments :

Anonymous ,  December 6, 2013 at 7:16 PM  

Hon.Minister should know this is also a kind of politcal tactic to drag the matter for generations.

Anonymous ,  December 6, 2013 at 10:16 PM  

This is CORRECT sayd.

TNA needs there seats allways in Parliment!

Correpted,Smuglers,Heroin Mafias, Murder mafias all are TNA. (Tamil National Alliance)

Thay are administered bya a LTTE diasporas from all over the word.

Spesially from USA Rudrakumaran, UK Emmanuel Father and in Sauth India by Father Caster. (who are a wonted person by INTERPOL)

Where Tamilnadu government, will not release any infomation regarding him.

தமிழ் நாட்டில் தலைமறைவாக வாழ்கின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் கத்தோலிக்க பாதிரியாரான அருட்தந்தை கஸ்பார்ராஜ், கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

கத்தோலிக்க பாதிரியாரான அருட்தந்தை கஸ்பார்ராஜ், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக கூறி, அமெரிக்காவின் எப்.பீ.ஐ. புலனாய்வு தரப்பினர் நியூயோர்க் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருப்பதாகவும், அவருக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் தற்போது தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகவும், அண்மையில் இந்தியாவின் என்.டீ.டி.வி தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.


அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உள்துறை அமைச்சு, தமிழக அரசாங்கத்திடம் கோரியுள்ள நிலையில், இதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு: இந்த கிரிமினல் பாதர் கஸ்பார்ராஜ், புலிகளிடமிருந்து பெரும்பகுதி பணத்தை கறந்தவர். கடைசிக்கட்டப் போரில் பிரபாகரனின் சரணடைதல் சம்பவத்தின் ஏற்பாட்டாளர்களில் இவரும் முக்கியமானவர் என்பது குறிப்பிடதக்கது.

இலங்கை இராணுவத்தினரிடம் பிரபாகரன் எப்படி சரணடைந்தார், கடைசியில் அவருக்கு என்ன நடந்ததது என்பது பற்றி முழுமையாக அறிந்தவர்களில் இந்த கிரிமினல் பாதர் கஸ்பார்ராஜ்ம் ஒருவர். ஆனால் … தங்கள் பிழைப்புக்காக பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று புலம்பெயர் புலியாதரவு தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் நெடுமாறனின் கூட்டாளியாகவும் இந்த கிரிமினல் பாதர் கஸ்பார்ராஜ்ம் செயல்படுகின்றார்.

Anonymous ,  December 7, 2013 at 6:58 AM  

A catholic priest accordingly to Holy Bible should annihilate his own will and live accordingly to the divine will.Now in these days it is a great schock for us to see the behaviours of priests.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com