Tuesday, December 31, 2013

சிறுவனை சிறுநீர் கழிக்க முடியாமல் செய்த அட்டமஸ்கட பிக்கு விடுதலை

வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்து சிறுவன் ஒருவனை சிறுநீர் கழிக்க முடியாமல் செய்த அட்டமஸ்கட விகாரதிபதி கல்யாணதிஸ்ஸ தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட சிறுவன் ஒருவன் கடந்த நவம்பர் 6 ஆம் திகதி கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வடமாகாண இரண்டாம் நிலை பிக்குவான கல்யாணதிஸ்ஸ தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவர் மீது தொடர்ந்து சிறுவர்கள் முறைப்பாடு கொடுத்தமையால் விளக்க மறியல் நீடிக்கப்பட்டது.

இந் நிலையில் குறித்த விகாராதிபதியால் நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் நீதிமன்ற உத்தரவுக்கமைய மூடப்பட்டுள்ள நிலையில் இன்று (31) இடம்பெற்ற விசாரணையின் போது விகாராதிபதி ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இதேவேளை இவ் வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இடம்பெறும் எனவும் வவுனியா மாவட்ட நீதிவான் இராமகமலன் தெரிவித்தார். இதேவேளை இவர் வெளியில் வந்துள்ளமையால் இவருக்கு எதிரான தடயங்கள், சாட்சிகள் என்பன மறைக்கப்பட வாய்ப்புள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

1 comments :

Arya ,  January 1, 2014 at 5:26 AM  

who is president in Sri Lanka ? Mr. Rajapakse Or Rathika Sitsabesan ?

Where r went now , hela urumiya ? and other Nationalist ?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com