Monday, November 4, 2013

ஜப்பான் தூதரகத்தினருக்கும் யாழ் அரச அதிபருக்கும் இடையில் கலந்துரையாடல்!

யாழ்.மாவட்டத்தில் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் முன் னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் தேவைகள் குறித்தும் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகத்திற்கும் ஜப்பான் நாட்டு தூதரகத்தை சேர்ந்த அதிகாரி களுக்கும் இடையில் கலந்துடையாடல் ஒன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்தச்சந்திப்பில் ஜப்பான் நாட்டின் தூதரகத்தைசேர்ந்த எல்.நாசி .பி.சினோசி உள் ளிட்ட ஐவர் பங்கு கொண்டிருந்தனர்.

இந்தச்சந்திப்பில் யாழ்.மாவட்த்தில் மீள்குடியேற்றப்பட்ட பல குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கப்படவேண்டிய தேவை மற்றும் வாழ்வாதாரத்தொழில் துறை என்பனவற்றை முன்னேற்ற வேண்டிய பலவிடயங்கள் குறித்து கலந்துரை யாடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com