Friday, November 1, 2013

பாடசாலை வளாகத்தில் இருந்து 1870, 1892, 1893 ஆண்டுக்காலத்து நாணயங்கள் மீட்பு!

வத்தேகம பாரதி தமிழ் வித்தியாலயத்தின் வளாகத்தில் மழை காரணமாக இடிந்து விழுந்த மண்ணை வெட்டி அகற்றியபோது அதில் இருந்து புராதன நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவை மாணவர்களின் உதவியுடன் மண்ணை வெட்டி அகற்ற பாடசாலை அதிபர் நடவடிக்கை எடுத்த போது மண்ணுக்குள் இருந்து புராதன நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது 1870ஆம் வருடத்திற்குச் சொந்தமான 23 நாணயங்கள் 1893ஆம் வருடத்திற்குச் சொந்தமான 05 சதம் நாணயங்கள் 11 மற்றும் 1892ஆம் வருடத்திற்குச் சொந்தமான 05 சதம் நாணயங்கள் 52உம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொலிசாரின் உதவியுடன் நாணயங்கள் அனைத்தையும் கண்டி தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com