Sunday, June 30, 2013

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் பொருட்டு ஆகஸ்ட் 2012 நடைபெற்ற க.பொ.த. (உயர் தர ) பரீட்சையில் ஆகக்குறைந்த தேவைகளை பூர்த்தி செய்துள்ள பரீட்சார்த்திகள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட பாடங்கள் மூன்றிலும் சாதாரண சித்தி (s) பெற்றிருத்தலுடன் பொதுசாதாரண வினாத்தாளில் ஆகக் குறைந்தது 30% புள்ளிகளை விண்ணப்பிக்கும் பரீட்சார்த்திகள் குறைந்த பட்ச தேவையாக பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

குறித்த விண்ணப்பபடிவத்துடனான கைநூலை பெற ரூபா 500 யினை செலுத்துவதுடன் கைநூலை தபால் மூலம் பெற விரும்புகிறவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் செயலகம், இல 20 வாட் பிளேஸ் கொழும்பு -7 அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விநியோக முகவர்களிடமிருந்தோ பணம் செலுத்துவதன் மூலம் 30-6-2013 ஆம் திகதியில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

விண்ணப்பங்களை கையளிப்பதற்கான முடிவுத்திகதி 23-7-2013 ஆகும்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்களை ,

மேலதிக செயலாளர்(கல்வி அலுவல்கள் மற்றும் பல்கலைக்கழக அனுமதிகள் )
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
இல 20 வாட் பிளேஸ் கொழும்பு -7 இல்


நேரிலோ அல்லது முகவரி இட்டு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கலாம்.


மேலும் 23-7-2013 திகதிக்கு பின் விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.

(பாறூக் சிகான்).

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com