விடுதலைப் புலிகள் அமைப்பின் தமிழினி வட மாகாண தேர்தலில்....
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவின் - பெண்கள் பிரிவு முன்னாள் தலைவி தமிழினி, ஆளும் கட்சியான ஐக்கள் மக்கள் முன்னணி சார்பாக வடமாகாண தேர்தல் களத்தில் குதிக்கவுள்ளார்.
தற்போது வன்னியில் புனர்வாழ்வு நிலையத்தில்உள்ள அவர் வெகுவிரைவில் விடுதலையாகவுள்ளதுடன், அவருக்கெதிராக நீதிமன்றில் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்திலிருந்தும் அவர் விடுதலை பெறவுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச தலைவர் கேபீ வினால் மேற்கொள்ளப்பட்டுவருவதாக உறுதியாகியுள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள வட மாகாண தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் பல முன்னாள் புலிகள் போட்டியிடவுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
2 comments :
பலமுனைகளில் பழைய புலிகள், தமிழ் கூட்டணி, டக்கிளசின் கட்சி, என்று தமிழர் மத்தியில் கடும் போட்டிகளை உருவாக்கி விட்டால், இலகுவாக மூன்றாம் கட்சி ஆட்சியை கைப்பற்றி விடும். வடக்கும் பறிபோகப்போகிறது.
Wannian
Unable to understand ,it is really confusing what will happen to the future of northern province..? It will be a surprising and puzzling matter to the voters.The deeper meaning of the candidates remain puzzled.For us it is something pukish.
Post a Comment