நாளைய சந்த்தியினரிடத்து நாம் ஒப்படைக்க வேண்டியது யாது? - ஜனாதிபதி மகிந்த
பிள்ளைகளிடத்தில் மனிதாபிமானத்தை வளர்க்க வேண்டும். அதனை வளர்ப்பதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இந்த நாட்டிலுள்ள அனைத்துச் சிறார்களுக்கும் கல்வியில் சமவுரிமைவழங்கப்படுவதற்கான செயற்றிட்டத்தை அரசு முன்னெடுக்கின்றது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தீய எண்ணக்கருக்களை உள்வாங்கி, குல,கோத்திர, மத, வேறுபாடுகளை எதிர்கால சந்ததிக்கு வழங்கக் கூடாது என்றும் அவர் தெளிவுறுத்தினார்.
நாடெங்கிலும் மகிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் ஆயிரம் பாடசாலைகளைக் கட்டியெழுப்பும் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரண்டாவது பாடசாலையை மாத்தறை மாவட்ட மாணவர்களுக்காக கையளிக்கும் விழாவில் இன்று காலை கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, எண்ணக்கருக்களையும், அவர்களின் ஆற்றல்களையும் வளர்த்தெடுப்பதற்கு பெற்றோர் பெரும் பங்களிப்பு நல்க வேண்டியது அவசியம் என்றும் எடுத்துரைத்தார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment