Friday, January 25, 2013

357 நபர்கள் உளவு வலை பின்னல் சிக்கியது! ஹைகிளாஸ் விபசாரிகளை வைத்து ஆபரேஷன்!!

துருக்கி உளவுத்துறை, மொத்தம் 357 பேர் அடங்கிய உளவு வலைப் பின்னல் ஒன்றை கண்டுபிடித்து, அதில் சிலரை கைது செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்த உளவு வலைப் பின்னலைச் சேர்ந்தவர்கள், ஹைகிளாஸ் விபசாரிகளை வைத்து, ராணுவ உயரதிகாரிகளிடம் ரகசியங்களை திருடி, வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வந்தனர் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

357 பேரில் வெறும் 88 பேர்தான் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பெண்கள். 50 பேர் ராணுவ அதிகாரிகள். உளவு வலைப்பின்னலின் தலைவர், ஒரு பல்கலைக்கழக மாணவர்!

இந்த உளவு வலைப் பின்னலைச் சேர்ந்தவர்கள், துருக்கியின் ராணுவ ராடார் சிஸ்டம் பற்றிய உளவுத் தகவல்களை சேகரித்தார்கள் என செய்தி வெளியிட்டுள்ளது, துருக்கியில் இருந்து வெளியாகும் பத்திரிகையான ‘ஹரியெட் டெயிலி’.

ஹைகிளாஸ் விபசாரிகளை ராணுவ உயரதிகாரிகளிடம் பழகவிட்டு, அதன்பின் பிளாக்மெயில் செய்து ராணுவ ரகசியங்கள் பெறப்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் எந்த நாட்டுக்காக உளவு பார்த்தார்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. 357 பேரில் வெறும் 88 பேர்தான் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எதற்காக செய்தியை வெளியே விட்டார்கள் என்பதும் புரியவில்லை.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com