Thursday, December 6, 2012

'பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நம்பிக்கையில்லை' பிரதம நீதியரசர் விசாரணையிலிருந்து வெளிநடப்பு

நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னால் ஆஜரான பிரதம நீதியரசர் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை திடிரென எழுந்து வெளிநடப்பு செய்துள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பிரதம நீதியரசர் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூன்றாவது நாள் அமர்வு இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

இதன்போதே, தெரிவுக்குழு மீது நம்பிக்கையில்லை என்று கூறிய பிரதம நீதியரசர் அமர்விலிருந்து வெளியேறினார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து நீதித்துறைக்கு பாராளுமன்றிற்குமான மோதல் அதிகரித்துள்ளதாக அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com