Friday, November 30, 2012

முகவரி இல்லாக் கலைஞர்களின் 'மட்டு மண்ணே வாவி கண்ட மீன் மகளே'

யுத்தத்தின் வடுக்கள் இளம் சமூகத்தினரை தேசத்திலிருந்து சிறகடித்தாலும் பல்வேறு நாடுகளிலுமிருக்கின்ற மட்டு இளைஞர்கள் இணைந்து புதியதோர் படைப்பை உருவாக்கி இருக்கின்றனர். இணைய வழியாக தமது கலைத்திறன்களை ஒருங்கிணைத்த இவ்விளைஞர்கள் 'மட்டு மண்ணே வாவி கண்ட மீன் மகளே' என்ற ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர்.

மட்டு நகரின் பெருமை கூறுகின்ற இப்பாடல் Friends Media வின் முதல் வெளியீடாக கடந்த 28.11.2012 ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வித விளம்பரங்களும் கிடையாத நிலையில் குறித்த இளைஞர்கள் இதனை FACEBOOK , YOUTUBE, TWITTER போன்ற இலவச இணைய வலையமைப்புக்களினூடாக மக்கள் முன்கொண்டு செல்ல முனைந்துள்ளனர்.



பாடல் வரிகள்:வி.விஜய் {மட்டு நகர் இளையதாரகை}
இசையமைப்பு : K.Newniyas
குரல் :G.Hary பிரவீன்



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com