Tuesday, November 20, 2012

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையர்கள் மேலும் 50 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட வானூர்தி மூலம் ,வர்கள் தாயகம் திரும்பியதாக, குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். இவர்களில் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 9 பேரும், மாத்தறையை சேர்ந்த 19 பேரும், புத்தளம் பகுதியை சேர்ந்த 13 பேரும், திருகோணமலையை சேர்ந்த இருவரும் இதில் அடங்குகின்றனர்.

மேலதிக விசாரணைகளுக்கென, இவர்கள், குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 284 இலங்கையர்கள், தாயகம் திரும்பியுள்ளமை, குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com