Wednesday, October 3, 2012

Missed Calls மூலம் கற்பம் தரிக்கும் இளவயது பெண்கள்

இனந்தெரியாத நபர்கள் மூலம் வரும் Missed Calls ஊடாக காதல் மலர்ந்து இளவயதினர் விரைவில் ஏமாற்றப்படு வதுடன் சிலர் கற்பம் தரிக்கும் நிலைக் கும் உள்ளாவதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகத் தின் சமூக வைத்திய விசேட நிபுணர் அயேஷா லொக்கு பாலசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருமணமான ஆண்கள் பொய்யான தகவல்களைத் தெரிவித்து இளவயது பெண்களை ஏமாற்றுகின்றனர் எனவும் இலங்கையில் இளவயதில் 6 வீதமானவர்கள் கர்ப்பம் தரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக அயேஷா லொக்கு பாலசூரிய தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அமைப்பொன்றுடன் இணைந்து கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும், இளவயதினர் விரைவில் ஏமாற்றப்படுவதாக குறிப்பிட்ட அவர், மட்டக்களப்பு, அனுராதபுரம் போன்ற இடங்களில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com