Tuesday, September 11, 2012

கண்டி பாடசாலை சூழலில் போதைப்பொருள் விற்ற நபர் பொதிகளுடன் கைது.

கண்டி உள்ளிட்ட பிரதேசங்களில் போதைப் பொருள் தூள் விற்பi செய்தவர் எனக் கூறப்படும் நபர் ஒருவர் அந்த போதைப் பொருள் தூள் பொதியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கண்டி பிரதான பாடசாலைகளின் அதிபர்கள் வழங்கிய தகவலை அடுத்து பாடசாலை மாணவர்களைத் தந்திரமாகப் பயன்படுத்தி இந்தச் சுற்றி வலைப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது.

புகைத்தல் மற்றும் மதுவரித் திணைக்களத்தின் அனுமதியின் கீழ் புகையிலை மற்றும் அதனுடன் எண்ணெய் கலந்து தயாரித்த இந்த போதை தரும் புகைத்தலுக்கான தூள் பொதியினை 25 வயதுக்குக் கீழ் பட்டவர்களுக்கு விற்பனை செய்வது தடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டிப் பாடசாலை மாணவர்கள் இந்தப் போதைப் பொருளை கூடுதலான பாவனை செய்வதாகக் கிடைத்த தகவலை அடுத்து இந்த  போதைப் பொருள் விற்பனை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இக்பால் அலி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com