Sunday, September 16, 2012

பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குல்! தாக்குதலுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில்

முறைப்பாடு ஒன்றை விசாரணை செய்வதற்காக வீடொன்றிற்குச் சென்ற படல்கும்புற பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் இருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இனந்தெரியாத நபர்கள் தன்னை கடத்துவதற்கு முயன்றதாக பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக பொலிஸார் இருவரும் குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில் முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அப்பெண்ணை கூரிய ஆயுதத்தினால் தாக்க முற்பட்ட வேளை அதனை தடுப்பதற்கு முயற்சித்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காயமடைந்த பொலிஸார் இருவரும் படல்கும்புற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிரிகல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட மூவரும் கைது செய்யப்படுள்ள அதேவேளை முச்சக்கர வண்டியிலிருந்த கைகுண்டு ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com