Saturday, August 11, 2012

தனிநாடு அமைக்க புறப்பட்டு, தமிழர்களை நாடோடி களாக்கியதுதான் மிச்சம்! மூதாட்டி நாடுகடத்தல்

தனது மகள் வீட்டில் தங்கியிருந்த 70 வயது மூதாட்டியான குணபூசனி கந்தசாமியை கனடா இலங்கைகுத் திருப்பி அனுப்புகின்றது. அவரின் இரண்டு பிள்ளைகள் கனடாவில் இருக்கிறார்கள். மற்ற இரு பிள்ளைகள் நோர்வேயில் இருக்கிறார்கள். அவருக்கும் நோர்வேயில் நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரம் இருந்திருக்கிறது. ஆனால் அவரது பாஸ்போர்ட்டில் அதற்கான அனுமதி காலாவதியாகிவிட்டது.

கனடாவில் உள்ள தமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் இணைந்து கொள்வதற்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதை கடந்த நவம்பரில் இருந்து கனடா நிறுத்தியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தனிநாடு அமைக்கப் புறப்பட்டு, தமிழ் மக்களை நாடோடிகளாய் ஆக்கியதுதான் நமது இளைஞர்கள் கடந்த 30 ஆண்டுகளாகப் பெற்றுக்கொடுத்த நன்மைகள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com