Thursday, July 26, 2012

இராணுவம் மரணச்சான்றிதழ் வழங்குகின்றது என கூறப்பட்ட குற்றச்சாட்டு, உண்மைக்கு புறம்பானது.

யுத்தத்தில் காணாமல் போனோருக்கு இராணுவம் மரணச்சான்றிதழ் வழங்கு வதாக மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச் சாட்டு உண்மைக்கு புறம்பானதென, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல்போன தமிழர்களுக்கு பலவந்தமாக படையினர் மரணச்சான்றிதழ் வழங்கும் செயற்திட்டடமொன்று முன்னெடுக்கப்படுவதாக, அண்மையில் ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டன.

மேலும், தற்போது அமுலில் உள்ள சட்டங்களின் பிரகாரம் அரசாங்கம் செயற்படுகின்றதே தவிர, பாதுகாப்பு தரப்பினர் எவ்வித அழுத்தங்களையும் மேற்கொள்ளவில்லையென, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com