Monday, July 30, 2012

விமான நிலைய "பச்சை வாயிலை" பயன்படுத்த முயலும் போதை மன்னர்கள்.

பன்னாட்டு போதைப் பொருள் வியாபாரப் பெரும் புள்ளிகள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் உள்ள "கிறீன் சனல்" ஊடாக வெளியேறி நாட்டுக்குள் வருவதற்குத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் மூலம் அறிந்து கொண்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிணங்க கட்டுநாயக்கா "கிறீன் சனல்" ஊடாக வெளியேறுபவர்களைச் கடுமையாக சோதனையிட ஆரம்பித்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பன்னாட்டு போதைப்பொருள் வியாபாரிகள் இந்த நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டு வருவதைத் தடுப்பதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் "ரெட் சனல்" இருப்பது போல, கடல் மார்க்கம் உட்பட நாடு முழுதும் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், "கிறீன் சனல்" ஊடாக வருபவர்கள் எந்தவித சோதனைக்கும் உட்படுதப்படமாட்டார்கள் என்பதால் போதைப்பொருள் மன்னர்கள் தமது போதைப்பொருளை இந்த வாசலூடாகக் கொண்டுவர முயற்சிக்கின்றனர் என்பது புலனாய்வு பிரிவினருக்கு தெரிய வந்துள்ளதையடுத்தே இன்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com