Wednesday, July 25, 2012

நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தினை முன்னிட்டு, முத்திரை வெளியீடு

நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தினை முன்னிட்டு, வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களின் ஏற்பாட்டில், இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் ஞாபகார்த்த முத்திரை ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண பிரதேசத்தின் சமூக, கலாச்சார, சமய மற்றும் வரலாற்று பெருமைமிக்க இதயப்பகுதியாக நல்லூர் விளங்குகின்றது. இக்கோயிலின் இவ்வாண்டுக்கான வருடாந்த மகோற்சவம் 24 யூலை 2012 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 17 ஆகஸ்ட் 2012 அன்று தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிகழ்வில் வட மாகாண உயர் அதிகாரிகள், அஞ்சல் திணைக்கள உயர் அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com