Thursday, December 15, 2011

போலி அனுமதிப்பதிரங்களுடன் மரங்களை எடுத்துச் சென்றவர் கைது.

போலி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து, எடுத்துச்செல்லப்பட்ட ஒரு தொகை தேக்கு மரங்கள் கைப்பற்றப்பட்டன. எம்பிலிபிட்டியவிலிருந்து பாணந்துறை வரை இந்த தேக்கு மரங்கள் எடுத்துச்செல்லப்பட்ட போது, கைப்பற்றப்பட்டன. சுமார் 5 லட்சம் ரூபாவிற்கும் கூடுதலான பெறுமதியுடைய தேக்கு மரங்கள், போலியான ஆவணங்களை தயாரித்து எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன. வீரகெட்டிய பிரதேச செயலாளரின் இலட்சினையை போலியாக தயாரித்து, அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதாக, எம்பிலிபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மரங்களை எடுத்துச்சென்ற டிப்பர் ரக வாகனமும், சாரதியும், கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com