16 வயது சிறுமி இராணுவ சிப்பாயால் பலாத்காரமாக பாலியல் வல்லுறவு.
மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் காட்டில் விறகு எடுக்கச் சென்ற 16 வயது சிறுமியை இராணுவ சிப்பாய் ஒருவர் பலாத்காரமாக பாலியல் வல்லுறவு புரிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாகரை பெரிய தட்டு முனை காட்டுப் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி விறகு எடுக்கச் சென்ற இப்பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை தட்டுமுனை களப்பு பகுதியிலுள்ள இராணுவ முகாம் சிப்பாய் ஒருவர் பலாத்காரமாக பாலியல் வல்லுறவு புரிந்துள்ளடன் இது தொடர்பாக வெளியில் சொன்னால் சுட்டுக் கொல்லப்படுவாய் என அச்சுறுத்தியதையடுத்து குறித்த சிறுமி பயம் காரணமாக விடயத்தை மறைத்து வைக்க முயன்றுள்ளார்.
இப் பாலியல் வல்லுறவையடுத்து சிறுமி கர்ப்பம் தரித்தமையை அடுத்தே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிப்பாயை கண்டால் அடையாளம் காட்டுவதாக சிறுமி வெள்ளிக்கிழமை பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதே வேளை சிப்பாயை அடையாளம் காண்பிப்பதற்கும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் நடவக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment