Thursday, February 17, 2011

ஐ.ம.சு.மு வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிரான மனு மீதான தீர்ப்பு 24 இல்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பங்கு கொள்வதற்காக யாழ் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அம்முன்னணி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு எதிர்வரும் 24ம் திகதி வழங்கப்படுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சிங்களத்தில் பெரமுன எனவும் ஆங்கிலத்தில் அலயன்ஸ் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி கூட்டணி தமிழில் எவ்வாறு தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்கு அப்பால், ஆங்கிலத்தில் அலயன்ஸ் என்ற சொல்லுக்கான மொழிபெயர்பான கூட்டமைப்பு எனும் பொருளை வாதமாக கொண்டு நீதிமன்று சென்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அதன் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த மேன்முறையீடு செய்திருந்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை தமிழில் மொழிபெயர்ப்பதில் ஏற்பட்ட குழப்பமான நிலையே வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்குக் காரணமென மனுதாரர் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனு தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு முன்னறிவித்தல் கடிதம் விடுப்பதா அல்லது இடைக்கால தடை உத்தரவு பிறப்பிப்பதா என 24ம் திகதி தீர்ப்பளிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் சத்யா ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com