Tuesday, November 9, 2010

ஹட்டனிலும் அரசிற்கு எதிரான போராட்டமொன்று.

அரசே கோதுமை மாவின் விலையை உடனடியாக குறை அல்லது மானியம் வழங்கு, உழைப்புக் கேற்ற ஊதியம் வழங்கு, தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை அரசே தீர், சரத்பொன்சேக்காவை விடுதலை செய் போன்ற கோஷங்களுடன் இன்று ஹட்டன் நகரில் மாபெரும் ஏதிர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில் நாட்டின் மூவின மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அதேநேரம் நேற்று கொழும்பு கண் வைத்தியசாலை சந்தியில் முன்னாள் படைவீரர்கள் , யுத்தத்தில் அங்கவீனமுற்ற படையினர் ஆகியோர் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி ஒன்றையும் நடாத்தியிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com