Friday, October 29, 2010

அரசைக் கவிழ்க முயன்றவர் விடுதலை.

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது சிறைவாசம் அனுபவிப்பவருமான சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசாங்கத்தினை கவிழ்க முற்பாட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த சரத் பொன்சேகாவின் செயலாளர் கப்டன் சேனக சில்வா குறித்த குற்றச்சாட்டிலிருந்து கொழும்பு நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளர்ர்:

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அறிக்கை ஒன்றை நீதிமன்றிற்கு சமர்பித்த இரகசிய பொலிஸார், சந்தேகநபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு சமர்பித்துள்ளதாகவும், அந்த அறிக்கையினை பரிசீலித்த சட்டமா அதிபர் சந்தேகநபர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க போதுமான சாட்சியங்கள் இல்லையெனக் கூறியதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com