Thursday, September 23, 2010

எழிலன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. இராணுவப் பேச்சாளர்.

புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த எழிலன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உதய மெதவெல் தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் இனநல்லிணக்கு குழு முன் சாட்சியமளித்த எழிலனின் மனைவி, தனது கணவன் உள்ளிட்ட புலிகளின் ஏழு தலைவர்களை இராணுவத்தினர் இரகசிய இடமொன்றில் தடுத்துவைத்திருப்பதாக வெளியிட்டுள்ள தகவல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உதய மெதவல, எழிலனின் மனைவியின் கூற்றினை நிராகரித்துள்ளதுடன் இராணுவத்திடம் சரணடைந்த புலிகளின் சகல தலைவர்களும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் இராணுவத்தினர் எவ்விதமான இரகசிய சிறைகளையும் வைத்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com