Friday, September 24, 2010

சரத்பொன்சேகாவே லசந்தவை கொன்றார் என்கின்றார் மேர்வின்.

அத்தியடிப் பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவத்துடன் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவிற்கு தொடர்பு இருப்பதாக பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

இப்படுகொகைக்கு பின்னால் முன்னாள் இராணுவத் தளபதி உள்ளார் என்பதற்கு தன்னிடம் வலுவான சாட்சியங்கள் உள்ளதாக தெரிவிக்கும் மேர்வின் சில்வா லசந்த படுகொலைச் சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் தெரிவித்த அவர்
பிரபல ஊடகவியலாளர்களான கீத் நொயார் மற்றும் உபாலி தென்னக்கோன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியிலும் சரத் பொன்சேகா செயற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

படுகொலையாளிகளை பாதுகாக்க வேண்டாம் என மேர்வின் சில்வா ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com