Tuesday, September 21, 2010

உலகின் சக்திவாய்ந்த 3 ஆவது நாடாக இந்தியா வரும்: யு.எஸ்.

உலகின் சக்திவாய்ந்த 3 ஆவது நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய புலனாய்வு கவுன்சில் (என்ஐசி - NIC) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் ( EUISS) கூட்டாக வெளியிட்டுள்ள "உலக ஆளுகை 2025" என்ற அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 2025 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளில் இந்தியா 3 ஆவது இடம் வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில், முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் சீனாவும் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்த அறிக்கையின்படி, 2025 ல் கூட்டமைப்பு அடிப்படையில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாமிடத்திலும், ஐரோப்பிய ஒன்றியம் மூன்றாமிடத்திலும், இந்தியா நான்காம் இடத்திலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com