Saturday, August 28, 2010

ஈராக் குண்டு வெடிப்புகளில் 53 பேர் பலி

ஈராக்கில் போலிசாரை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 53 பேர் கொல்லப்பட்டதாகவும் 250 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படையினர் திரும்பப் பெறப்பட்டு வரும் நிலையில், மீண்டும் தீவிரவாதிகள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

14 கார் குண்டுகளைப் பயன்படுத்தி இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படையினர் அனைவரும் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி தீவிரவாதிகள் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகத் தெரிகிறது. தலைநகர் பாக்தாதில் உள்ள போலிஸ் நிலையத்திற்கு அருகே குண்டு வெடித்ததில் 15 போலிசார் உள்பட 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஈராக்கிலிருந்து அமெரிக்க போர் படையினர் வெளியேறியிருப்பதால் அங்கு தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com