உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை மண்டியிடாது கெஹலிய
உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் எங்கள் நண்பர்களே என்றும் எங்கள் எதிரிகள் அல்ல என்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியமானது நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியை கருத்திற் கொண்டே கடனுதவியை மிக விரைவாக தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் அவர்கள் எமது செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், புரிந்துணர்வின் அடிப்படையில் அவர்களுடன் நல்லுறவை பேணிவருவதாகவும் அவர்களிடம் எக்காலத்திலும் இலங்கை மண்டியிடாது எனவும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment