Wednesday, June 2, 2010

ஜப்பான் மீண்டும் இலங்கைக்கு நிதியுதவி.

இடைத்தங்கல் முகாம் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கென ஜப்பான் மீண்டும் 100 மில்லியன் ஜப்பான் ஜென் களை (1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. இப்பணம் நேரடியாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயரிஸ்தானிகத்திடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பான் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து நேரடியாகவும் தொண்டு நிறுவனங்களுடாகவும் இலங்கைக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளது. அத்துடன் இலங்கைக்கான தமது பணி தொடரும் எனவும் ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com