லிபியா விமானம் நொறுங்கி விழுந்தது : 105 பேர் பலி .
தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்து கொண்டிருந்த லிபியா விமானம் ஒன்று டிரிபோலி விமான நிலையத்தில் இன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 105 பேர் பலியானார்கள்.
பலியானவர்களில் 94 பேர் பயணிகள் என்றும், 11 பேர் விமான சிப்பந்திகள் என்றும் டிரிபோலி விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பது குறித்த தகவல் உடனடியாக தெரியவரவில்லை. மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
0 comments :
Post a Comment