Monday, March 1, 2010

தேயிலை: இலங்கையை மிஞ்சியது கென்யா

உலகில் தேயிலை ஏற்றுமதியில் ஆக அதிக தொகையை ஈட்டிய நாடு என்ற பெருமையை இலங்கை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆனால் ஆக அதிக ஏற்றுமதி என்று வரும்போது அதன் ஜம்பம் ஆப்ரிக்க நாடான கென்யாவிடம் பலிக்கவில்லை. தேயிலை ஏற்றுமதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையைக் கிழே தள்ளிவிட்டு விட்டது கென்யா.

வறட்சி காரணமாக இலங்கையில் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றாலும் 2009ல் ஏற்றுமதி வருவாய் 1,000 மில்லியன் டாலரைக் கடந்து விட்டது என்று இலங்கை தேயிலைத் துறைத் தலைவர் லலித் ஹெட்டியரச்சி, ஒரு செய்தி இதழிடம் சொன்னார்.
இலங்கை சென்ற ஆண்டில் 280 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com