Tuesday, January 12, 2010

அல்கொய்தாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஏமன் நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு

தீவிரவாதத்தை கைவிட்டு விட்டு ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வரும் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ஏமன் நாட்டு ஜனாதிபதி அலி அப்துல்லா சலேக் அறிவித்து இருக்கிறார். அல்கொய்தா தீவிரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அலி அப்துல்லா வெள்ளைக்கொடி ஏற்றி இருக்கிறார். அல்கொய்தாவின் சவால்களை சமாளிக்க என் அரசாங்கம் உறுதியாக நடவடிக்கை எடுக்கும். வன்முறையை கைவிட மறுக்கும் அல்கொய்தாவினரை எங்கள் ராணுவ வீரர்கள் ஒடுக்குவார்கள் என்று அலி அப்துல்லா கூறினார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com