Sunday, August 2, 2009

வேலை இழக்கின்றவர்களுக்கு காப்புறுதி திட்டத்தின் கீழ் மாதாந்த கொடுப்பனவு.

பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையிழந்துள்ள 50000 தொழிலாளர்களுக்கு தொழில் காப்புறுதி திட்டத்தின் ஊடாக மாதாந்த கொடுப்பனவு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதியினால் வரையப்பட்டுள்ள மேற்படி திட்டம் எதிர்வரும் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருவதுடன் தொழிலாளிகள் மாதாந்தம் 4000 ரூபாவில் இருந்து 12000 ரூபா வரைப் பெற தகுதியடைவர் எனக் கூறப்படுகின்றது.

மாதாந்தம் 20,000ரூ விற்கு குறைவான சம்பளத்துடன் வேலைசெய்து 180 நாட்களுக்கு குறைவான நாட்களில் வேலையை இழந்தவர்கள் மாத்திரம் இவ் உதவியை பெறமுடியும்.

இதற்கான பதிவுத் திகதி அறிவிக்கப்பட்டதும் தொழிலாளர்கள், நாராயன்பிட்டியில் உள்ள தொழிலாளர் திணைக்களத்தில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com