Wednesday, August 12, 2009

மும்பையில் கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளின் உடல்களை ஏற்க பாகிஸ்தான் மறுப்பு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி, பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் தொடர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 9 தீவிரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளின் உடல்களும், மும்பையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை பெற்றுக்கொள்ளும்படி, பாகிஸ்தான் அரசுக்கு, மத்திய அரசு பல கடிதங்கள் அனுப்பி உள்ளது. என்றாலும், பாகிஸ்தானிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. தீவிரவாதிகளின் உடல்களை பெற்றுக்கொண்டால், பாகிஸ்தான் தான் தீவிரவாதிகளின் புகலிடம் என்பது உறுதி ஆகி விடும் என்ற கருத்தில், உடல்களை பெற்றுக்கொள்ள பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com