Saturday, July 25, 2009

12 ஆபாச இணையத்தளங்களை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு.

இலங்கையில் இருந்து செயற்படும் 12 ஆபாச இணையத்தளைங்களை இடைநிறுத்துமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் நிஸாந்த கப்பு ஆராச்சி இலங்கை தொலைதொடர்பு திணைக்களத்தின் இயக்குனர் நாயகத்திற்கு ஆணையிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுப் பிரினர் இது தொடர்பாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், இவ் இணையங்களில் இலங்கைப் பெண்கள் மற்றும் குழந்தைகளது அபாசப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை சமூகசீரழிவுக்கு வழிவகுப்பதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் இவ்வாறான இணையங்களை நிர்வகிப்பது இலங்கை குற்றவியல் கோவையின் இலக்கம் : 1983 இன் 22 பிரிவின் கீழ் கிறிமினல் குற்றமாகும் எனவும் தெரியப்படுத்தினர்.

இது தொடர்பாக இணையத்தள உரிமையாளர்கள் பதிலளிப்பதற்கு எதிர்வரும் மாதம் 7ம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறு தெரிவித்த மஜிஸ்திரேட் அவ்வாறு அவர்கள் செய்யாக பட்சத்தில் நிரந்தரமாக நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com