Thursday, July 9, 2009

அவுஸ்ரேலியாவில் இரு 07 மாத பச்சிளம் குழந்தைகள் மர்மமானமுறையில் மரணம்.

அவுஸ்ரேலியாவில் இரு 07 மாத பச்சிளம் குழந்தைகள் மர்மமானமுறையில் மரணமானதை தொடர்ந்து அவுஸ்ரேலிய பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

இலங்கையை சேர்ந்த அரியரட்ணம் என்பவரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அவரது மனைவியும் அவுஸ்ரேலியாவில் வசித்து வருகின்றனர். அரியரட்ணம் பொறியிறல் ஆலோசனை கம்பனியென்றில் முகாமையாளராக கடமையாற்றிவருகின்றார்.

சம்பவம் இடம்பெற்றதினமான திங்கட்கிழமை அரியரட்ணம் தனது கடமையை முடித்துவிட்டு வீடுவந்து சேர்ந்தபோது தனது இரு குழந்தைகளான லாச்லன் மற்றும் சவ்பி ஆகியோர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்று உடனடியாக அம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து குழந்தைகளை பிரின்ஸ்செஸ் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்போது குழந்தைகள் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்

குழந்தைகளின் தாயாரான றீட்டா பிரசவத்தை தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தக்குறைவு நோயினால் பலநாட்களாக நோய்வாய்ப்பட்டு கோமா நிலையில் இருந்தவராவார். சம்பவம் இடம்பெற்ற அன்றயதினம் மருந்து உட்கொண்டதன் விளைவாக மயக்கநிலையில் இருந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிசார் வீட்டை சல்லடை போட்டு தேடியபோது வீட்டிலிருந்து பெருமளவிலான மருந்து பொருட்களை கண்டெடுத்துள்ளனர். இம்மருந்துபொருட்கள் திருமதி அரியரட்ணத்திற்கு அவரது நோய்க்காக வைத்தியர்களால் வழங்கம்பட்டவை என தெரிவித்த பொலிசார் சம்பவம் இடம்பெற்ற தினம் மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் திருமதி அரியரட்ணம் மயக்கமடைந்திருக்கலாம் தெரிவித்தனர்.

அரியரட்ணம் தம்பதியினர் எந்தவிதமனான பிரச்சனைகளும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்தவர்கள் என்றும் நீண்டகாலமாக குழந்தைகள் இல்லாமல் ஏங்கி கொண்டிருந்தவர்களுக்கு அண்மையில்தான் ஆண் குழந்தையான லாச்லனையும் பெண் குழந்தையான சவ்பியும் கிடைத்தனர் என அயல்வீட்டு பெண்ணொருவர் அரியரட்ணம் அவர்களின் மனைவிய குழந்தைகளில் மிகவும் ஆhவமாக காணப்பட்டவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாயார் தொடர்ந்தும் கோமா நிலையில் உள்ளதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com