Wednesday, June 24, 2009

வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களை இறக்க இலங்கை அரசு உடன்பட்டுள்ளது.

வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களை இறக்க இலங்கை அரசு உடன்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள இலங்கை உயர்மட்டக்குழுவினரிடம் தாம் இது தொடர்பான வேண்டுகோளை முன்வைத்தபோது அவர்கள் அதற்கு இணங்கியதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இக்கப்பலில் உள்ள 800 மெற்றிக்தொன் பொருட்களும் சென்னையில் இறக்கப்பட்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியுடன் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களைச் சென்றடையும் என செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com