Wednesday, October 1, 2008

கிழக்கு மாகாணத்திலுள்ள புத்தி ஜீவிகளையும் கல்விமான்களையும் ரி.எம்..வி.பி.யின் முக்கிய தளபதிகளையும் ரி.எம்.வி.பி.யின் தலைவர் கருணா அம்மான் சந்திப்பு



30.09.2008. நேற்றுக் காலை 10. மணியளவில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலுள்ள புத்தி ஜீவிகளையும் கல்வி மான்களையும் ரி.எம்.வி.பி.யின் முக்கிய பொறுப்பாளர்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலி;ன் போது கிழக்கு மாகானத்தின் அபிவிருத்தி பற்றியும் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி; மக்களுக்காக செய்ய காத்திருக்கும் செயற்ப் பாடுகள் பற்றியும் கிழக்கின் தற்போதைய நிலைமை பற்றியும் புத்தி ஜீவிகளுக்கும் கல்விமான்கலுக்கும் விளக்கமளித்தார் அத்தோடு இக் கலந்துரையாடலில் இச் சந்திபபில் கலந்து கொண்டவர்கள் தங்கள் மாவட்டங்களிலுள்ள குறைபாடுகளை பற்றியும் கருணா அம்மான் அவர்களிடம் எடுத்து கூறினா.; அப் பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் முகமாக இலங்கையின் பாதுகாப்பு துறை செயளாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களை சந்தித்து கலந்துரையாட தீர்மானித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் கலந்துரையாடல் நிறைவுற்றதும் கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் செயலர் கோட்டாபேய ராஜபக்ச அவர்களை கிழக்க மக்கள் பிரதிநிதிகள் சகிதம் சந்தித்து உரையாடினார். இக் கலந்துரையாடலில் மூன்றுமாவட்டங்களிலுள்ள குறைபாடுகள் பாதுகாப்பு நடைமுறைகள் பற்றியும் யுத்தத்தால் இடம் பெயர்ந்து மீண்டும் குடியமர்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகள் பற்றியும் புத்திஜீவிகளும் கல்விமான்களும் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களிடம் கூறினா.; இப் பிரட்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணும் ஆலோசனை வழங்கியது மட்டுமன்றி சில பிரட்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தரப்படும் என்றும் உறுதி மொழி வழங்கியுள்ளார். இக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளான பாரதி, ஜெயம், மார்க்கன், சின்னத்தம்பி, ஜீவேந்திரன், மங்களமாஸ்ரர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com