Tuesday, September 25, 2018

தமிழ் தேசியம் என்ற கரும்போர்வையால் மூடி மறைக்கப்படும் போதநாயகியின் (தற்)கொலைக்கு கிடைக்குமா நீதி.

வவுனியாவைச் சேர்ந்த ஓர் உழைப்பாளியின் மகள், போதாநாயகி. (தற்)கொலை செய்து கொண்டதாக ஊடகங்கள் பத்தோடு ஒன்று பதினொன்றாக செய்திகளை வெளியிட்டன. ஆனால் அவர் தற்கொலைதான் செய்துகொண்டிருந்தாலும் அதற்கான காரணங்களை தேட எவரும் முயற்சிக்கவில்லை மாறாக நம் ஊடகங்கள் தீர்பெழுதிமுடித்து விட்டது.

அத்துடன் போதாநாயகிக்காக நீதிகோருவோரது குரல்வளைகள் தமிழ் தேசிய ஊடகங்கள் என முத்திரை குத்திக்கொண்டவைகள் நெருக்கிக்கொண்டிருக்கின்றது. அதற்கான காரணம் வேறொன்றும் அல்ல. அவர் கொலை செய்யப்பட்டிருந்தால் அக்கொலை அவரதும் கரத்தை பிடித்தவர், அயோக்கியர்கள் இறுதியா தஞ்சமடையும் „தமிழ் தேசியம்„ என்ற முகாமைச் சேர்ந்தவரென்பதாகும்.

ஆனாலும் போதாநாயகிக்கு நீதி வேண்டும் என்ற குரல்கள் தமிழ் தேசியப் பீரங்கிகளையும் தாண்டி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. இலங்கைநெட் அதன் பாணியில் விடயம் தொடர்பில் தனது புலனாய்வினை மேற்கொண்டு மக்கள் மன்றில் சமர்பணம் செய்யும். அதேநேரம் போதாநாயகிக்காக முகநூலூடாக நீதிகோரும் சுப்ரமணிய பிரபா வின் மனுவினை வாசகர்களின் பரிசீலனைக்கு விடுகின்றோம்.

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் சாவுக்கு இதுவும் காரணம்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளரும் வன்னியூர் செந்தூரன் என்று அறியப்படுபவரின் மனைவியுமான நடராசா - போதநாயகி அவர்கள் திருகோணமலை கடற்கரையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அவர் எவ்வாறு இறந்தார்?
கொலை செய்யப்பட்டாரா?
அல்லது தற்கொலை செய்துகொண்டாரா?
என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதில் இல்லை.

எனினும் அவரின் சமீப கால முகநூல் பதிவுகளை பார்க்கும் போது பல கேள்விகளுக்கு விடை இருப்பதுபோல தோன்றுகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் வன்னியூர் செந்தூரனை திருமணம் முடித்த போதநாயகி மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் தந்தை தும்பு மிட்டாய் விற்றும் தாய் கூலி வேலைக்கு சென்றுமே அவரை படிப்பித்தனர். அச்சிறிய கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய முதல் மாணவி போதநாயகி நடராசா ஆவார். பல கனவுகளோடு பல்கலைக்கழகத்தில் கற்றுத்தேர்ந்து பட்டம் பெற்று பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியில் சேர்ந்த போதநாயகியின் வாழ்வு திருமணம் முடித்த ஆறே மாதங்களில் மண்ணோடு மண்ணாகிப்போனமைக்கு யார் காரணம்?

அவரை திருமணம் முடித்த வன்னியூர் செந்தூரனின் கடந்த காலமும் நிகழ்காலமும் பல திடுக்கிடும் அம்சங்களை கொண்டது. வெளியில் ஒரு கவிஞராக, எழுத்தாளராக, இன உணர்வாளராக காட்டிக்கொள்ளும் செந்தூரன் தனிப்பட்ட வாழ்வில் படு கேவலமான நடத்தை உடையவர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே வன்னியூர் செந்தூரன் பிரான்ஸ் வதிவிட உரிமை கொண்ட அவரிலும் வயதில் கூடிய ஒரு பெண்ணை முகநூல் ஊடாக காதலித்து இந்தியாவில் வைத்து பதிவுத்திருமணம் செய்தார். அப்பெண்ணிடம் இருந்து பல லட்சம் பணம் விலை கூடிய கைபேசி என ஏராளம் பெற்றுக்கொண்டு ஈற்றில் இவரை நம்பி வந்த அப் பெண்ணை இந்தியாவில் விட்டுவிட்டு நாட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். அப்பெண் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சென்று நண்பர்களால் காப்பாற்றப்பட்டார். தன் ஆற்றாமையையும் ஏமாற்றப்பட்டதையும் செந்தூரனின் உண்மை முகத்தையும் முகநூலில் ஆதாரபூர்வமாக எழுதி தனக்கு நீதி கிடைக்காது போயினும் இன்னொரு பெண் தன்னைப்போல எதிர்காலத்தில் பாதிக்கப்படக்கூடாதென்று போராடினார்.

ஆனால் செந்தூரன் தன் மேல் போர்த்திக்கொண்டிருந்த தேசிய வேசத்தினால் அப்பெண்ணின் குரலை வலுவிழக்க செய்துவிட்டார். கவிஞர் மீதான காழ்ப்புணர்ச்சியால் பேசுகிறார் மண முறிவு இயல்பானதுதானே இதிலென்ன புதுமை என்றெல்லாம் நியாயம் பேசினார்களேயொழிய அப்பெண்ணுக்கு ஆதரவாய் எவரும் குரல் கொடுக்கவில்லை. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. போராடிப்பயனில்லை அவமானமே மிஞ்சும் என்று நினைத்த அவர் தானாக விழகிப்போனார். செந்தூரன் பொன்னாடை போர்த்திக்கொண்டு அடுத்த பெண் வேட்டைக்கு தயாரானார்.

பிரான்ஸ் பெண்ணை ஏமாற்றிய அடுத்து ஆண்டே (2017) அவர் லண்டனில் வசிக்கும் கணவனை இழந்த பெண் ஒருவரின் மகளை குறிவைத்து தன் நகர்வை மேற்கொண்டார். அப்பெண் இலங்கையிலும் தாய் லண்டனிலும் உள்ளனர். இலங்கையில் உள்ள அவரின் மகளை தான் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தை கூறியிருகிறார். லண்டனில் உள்ள அவர் வன்னியூர் செந்தூரனைப்பற்றி வெளியாட்களிடம் விசாரிக்க அவர் நல்லவர் வல்லவர் என்றே அனைவரும் கூறியிருக்கின்றனர். வெளி உலகுக்கு அவர் பிரான்ஸ் பெண்ணை பதிவுத்திருமணம் செய்த விடயம் தெரியாது முகநூலில் ஒரு சிறுவட்டத்துடனேயே அச்சம்பவம் முடிந்து போனது.

ஏற்கனவே தான் ஒரு பெண்ணை பதிவுத்திருமணம் செய்து கைவிட்டதை செந்தூரனும் அவரிடம் கூறவில்லை எனவே அவரை நம்பி மருமகன் மருமகன் என்று கூப்பிட்டிருகிறார் இவரும் மாமி மாமியென்று தேவை ஏற்படும் போதெல்லாம் போன் செய்து பேசி பணம் வாங்கி இருக்கிறார். அப்பெண் கணவரை இழந்தவர் மிகவும் கஸ்ட்டப்பட்டு சிறுக சிறுக சேமித்த பணத்தை மருமகனாகப்போகிறவர் தானேயென்று இவருக்கு அனுப்பி இருக்கிறார் அதையெல்லாம் வாங்கிக்கொண்டு அவர்களுக்குத்தெரியாமல் தற்போது இறந்து போன நடராசா - போதநாயகியை ஏமாற்றி இவ்வாண்டின் ஆரம்பத்தில் திருமணம் செய்திருக்கிறார்.

இவர்களின் திருமண படத்தை முகநூலில் கண்டபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை லண்டனில் உள்ள அந்த பெண்மணி உணர்ந்திருக்கிறார். இவருக்கு போன் செய்து ஏன் என்னை நம்பவைத்து ஏமாற்றினாய் என் மகளை கட்டுவாய் என்ற காரணத்தினால்தானே உனக்கு கேட்கும் போதெல்லாம் பணம் அனுப்பினேன் என்று பேசியிருக்கிறார் இத்திருமணம் திடீரென்று நடைபெற்றதால் எவருக்கும் சொல்லவில்லை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் திருமணம் நடந்துவிட்டது என்று செந்தூரன் கூறி இருக்கிறார். அதற்கு அப்பெண் நான் மகளின் திருமணத்திற்கென சிறுக சிறுக சேர்த்த பணத்தை உனக்கு தந்தேனே அதற்கு பதில் என்ன என்று கேட்டதற்கு யூலை மாதம் வரையும் பொருத்துக்கொள்ளவும் பணத்தை திரும்ப தருகிறேன் என்று கூறியிருக்கிறார். யூலை மாதம் கோல் எடுக்க இவரின் போன் வேலை செய்யவில்லையாம் நம்பரை மாத்தி விட்டார். மூன்று ஆண்டுகளில் உத்தியோகபூர்வமாக மூன்று பெண்களை வெற்றிகரமாய் ஏமாற்றி பல லட்சங்களை சுருட்டிய செந்தூரன் ஒரு பெண்ணை இன்று சாகடித்திருக்கிறார்.

இதற்கிடையில் திருநகரைச்சேர்ந்த ஒரு பெண்ணுடனும் இவர் நெருங்கி பழகியிருக்கிறார் அப்பெண்ணை திருகோணமலைக்கு அழைத்துச்சென்று அவருக்கு தெரிந்த கவிதாயினி ஒருவர் வாடகைக்கு பெற்றுக்கொடுத்த வீட்டில் குடித்தனம் நடத்தியும் இருக்கிறார் மேலே குறிப்பிட்ட மூன்று பெண்களை பணம்வாங்கியும் திருமணம் முடித்தும் ஏமாற்றியதற்கும் ஆதாரம் அனைத்தும் இருக்கிறது ஆனால் இப்பெண்ணுடனான தொடர்பிற்கு ஆதாரம் இல்லை முகநூல் நண்பர்கள் கூறியவை இவை.

அத்துடன் தமிழகத்தில் வசிக்கும் Ashroffali Fareed வன்னியூர் செந்தூரன் தொடர்பாக மேலும் ஒரு திடுக்கிடும் தகவலை கூறினார். தமிழகத்திற்கு அடிக்கடி சென்றுவரும் செந்தூரன் சென்னையை சேர்ந்த அழகிய இளம் பெண் ஒருவரையும் திருமணம் முடித்து வடபழனி மற்றும் பல்லாவரம் பகுதியில் சிலகாலம் சேர்ந்து வசித்துவிட்டு கைவிட்டுச்சென்றதாகவும் அப்பெண்ணுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் அநாதரவாய் நின்ற அப்பெண்ணை தான் நேரில் சந்தித்து உரையாடியதாகவும் தன் அவுஸ்திரேலிய நண்பர் ஊடாக அப்பெண்ணுக்கு உதவிகள் பெற்றுகொடுத்ததாகவும் முகநூலில் பின்னூட்டம் இட்டிருந்தார்.

இவ்வாறு திரும்பும் இடமெல்லாம் பெண் தொடர்பு வைத்துள்ள வன்னியூர் செந்தூரன் திருமணம் முடித்த இரு மாதங்களிலேயே தன் பழைய மன்மத விளையாட்டிற்கு திரும்பியிருக்கிறார். இவற்றை போதநாயகி அறிந்து கண்டித்த போது ஊரில் உலகத்தில் நடக்காததையா நான் செய்துவிட்டேன் என அலட்சியமாக பதில் கூறியிருக்கிறார். தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த அவர் அதை முகநூலில் பதிவாக இட்டு தன் மனவாற்றாமையை தீர்த்திருக்கிறார். அப்பதிவும் இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மூன்று மாதமாக போதநாயகியின் திருமண வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. அவரின் முகநூல் பதிவுகள் அனைத்தும் அதைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறது. கடந்த மாதத்தில் ஒரு கட்டத்தில் இப்படி 'அழுதுகொண்டும் தொழுதுகொண்டும் வாழ்வதை விட மடிந்து போவது மேல்" என விரக்தியோடு பதிவொன்றை இட்டிருக்கிறார்.

அத்துடன் கடந்த 20/08/2018 இல் தான் வாழ்வில் நம்பவைத்து ஏமாற்றப்பட்டதை ஒரு பெரும் கவிதையாக எழுதி பொதுவில் பகிர்ந்திருக்கிறார். அக்கவிதை அவர் இறப்பதற்கு இரு நாட்களின் முன் (18/08/2018) மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு அடியில் திகதியும் அவர் பெயரும் இடப்பட்டிருக்கிறது அதில் 20/08/2018 என்பதற்கு பதிலாக 20/08/2017 என அவரால் தவறுதலாக பதியப்பட்டிருக்கிறது.

தான் செத்துப்போனால் அக்கவிதை ஒரு மரண வாக்குமூலமாக இருக்கும் என நம்பியே அவர் அதை எடிட் செய்து அடியில் பெயர் திகதி போட்டிருக்கலாம் அல்லது அப்படி ஒரு கவிதையை நீயேன் எழுதினாய் என அவர் கணவரால் அச்சுறுத்தப்பட்டு ஓராண்டுக்கு முன்னர் எழுதியது என்பதுபோல் காட்ட மீண்டும் எடிட் செய்து பெயர் மற்றும் திகதி சேர்க்கப்பட்டிருக்கலாம் எது எப்படியோ அவர் இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன் அக்கவிதையை எடிட் செய்து பெயர் திகதி போடவேண்டிய தேவை அல்லது அழுத்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. என்னைப்பொருத்தவரை அவர் திகதியை 2018 என்பதற்கு பதிலாக 2017 என தவறுதலாகவே போட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன் அக்கவிதை அவரின் நிகழ்கால துயர் மிகு வாழ்க்கையினை படம்போட்டு காட்டுகிறது.

அத்துடன் இன்னொரு வேடிக்கையான சம்பவமும் இடம்பெற்றிருக்கிறது செந்தூரன் தான் மனைவியை அதிகம் நேசித்ததாக கூறுகிறார் ஆனால் அவர் இறப்பதற்கு இரு நாட்களின் முன் மெசேஜ் மூலம் தான் அவருக்கு போதநாயகி வவுனியாவிற்கு வருவதை தெரிவித்திருக்கிறார். மூன்று மாத கர்ப்பிணியான அப்பெண்ணுடன் போனில் பேசும் அளவுக்கு கூட நேரமில்லாதவராகவும் நெருக்கமில்லாதவராகவும் செந்தூரன் இருந்திருக்கிறார் அவரின் இறந்த உடல் கண்டெடுக்கப்படும் வரையில் அவரை தேடாது இருந்திருக்கிறார். தாய் வீட்டிற்கு சென்றிருப்பார் என்று தான் நினைத்ததாயும் பின் போன் செய்யும் போது அது வேலை செய்யவில்லை பணி காரணமாக சுவிச் ஓவ் செய்யப்பட்டிருக்கும் என நினைத்ததாயும் கூறுகிறார். இதுவா இருநாட்கள் தொடர்பில்லாமல் இருக்கும் ஒரு மனைவி மீது கணவன் காட்டும் அக்கறை?

அடுத்து அப்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டவுடன் ஊடகங்களுக்கு செந்தூரன் பேட்டி வழங்கையில் அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எமக்குள் எந்த பிரச்சனைகளும் இல்லை இது திட்டமிட்ட கொலை என கூறுகிறார். தற்கொலை என்ற கோணத்தில் எவருமே சிந்திக்காத போது இவருக்கு மாத்திரம் அந்த சிந்தனை எப்படி வந்தது? தமக்குள் எந்த பிரச்சனைகளும் இல்லையென்று முந்திக்கொண்டு பேட்டி கொடுத்தது ஏன்? தற்கொலை என்ற கோணத்தில் இம்மரணம் பார்க்கப்பட்டால் தன் கையில் விலங்கு மாட்டப்படும் என்பதை செந்தூரன் நன்கு உணர்ந்ததாலேயே இது தற்கொலை இல்லை கொலையென்று மரண விசாரணை அதிகாரி கூறுவதற்கு முன்பே தீர்ப்புக்கூறி இருக்கிறார்.

தன் மனைவி தற்கொலைசெய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்ததும் அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததும் செந்தூரனுக்கு ஏற்கனவே தெரியும். போதநாயகியின் முகநூலை பார்த்தாலே நமக்கும் அது தெரியும் சந்தோசமாக குடும்பம் நடத்தும் இளம் சோடிகளின் குடும்ப வாழ்க்கையினை வெளிப்படுத்துவதாய் அவர் எப்பதிவுகளையும் கடந்த மூன்று மாதங்களாய் இடவில்லை சோக மயமாகவும் வாழ்கையில் விரக்தியுற்றுமே பதிவுகளை இட்டிருக்கிறார். முதல் சிசுவை கருவில் தாங்கும் ஏனைய பெண்களின் மன மகிழ்ச்சி இவரிடம் இருக்கவில்லை.

போதநாயகி தற்கொலைதான் செய்துகொண்டார் என உறுதியாக தெரியும் பட்சத்தில் அதற்கு காரணம் தான் தான் என்பதை பொலிசாரும் மக்களும் ஊகித்து உணர்ந்துகொள்வார்கள் என்பதை உணர்ந்த செந்தூரன் தாம் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாய் காட்ட பல்வேறு நாடகங்களில் ஈடுபட்டார். ஆறு மாதங்களுக்கு முன்பு தான் எழுதிய கவிதையொன்றை ஊடகங்களுக்கு கொடுத்து இத்தனை அன்பு வைத்திருந்தேன் என் மனைவியில் என மக்களையும் சுற்றத்தையும் நம்ப வைக்க முயற்சித்தார்.

அத்துடன் தான் இன உணர்வு கொண்டு செயற்படுவதால் தன்னை பழிதீர்க்க இலங்கை அரச புலனாய்வாளர்கள் திட்டமிட்டு தன் மனைவியை கொலை செய்து விட்டதாய் தன் நண்பர்களுக்கு கூறி அக்கதைகளை சமூக வலைத்தளங்கள் இணையத்தளங்கள் அனைத்திலும் பரவ விட்டார். தான் எழுதிய புத்தகங்கள் பெற்ற விருதுகள் எல்லாவற்றையும் மனைவியின் உடலின் மீது வைத்து அதை படம் பிடித்து அனுதாபம் தேடினார். மொத்தத்தில் ஒரு மாபெரும் நாடகத்தை அரங்கேற்றம் செய்து பிசிரில்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நடிப்புக்குள்ளும் சில பெரிய மனிதர்களின் ஆதரவினாலும் தம் மகளின் தற்கொலைக்கு அவள் கணவனே காரணம் என்ற அந்த ஏழைப்பெற்றோரினதும் உறவினர்களினதும் குரல்கள் அடங்கிப்போய்விட்டன.

என் முகநூலில் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், சமூக அமைப்புக்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கற்றறிந்த பெரியோர் என பலரும் இருக்கின்றீர்கள் உங்கள் அனைவரிடமும் ஒரு பணிவான வேண்டுகோள்

இந்த அப்பாவிப்பெண்ணின் படுகொலைக்கு நீதியினை பெற்றுக்கொடுக்க முன் வாருங்கள். தேசியம் என்ற பெயரிலும் இன உணர்வு என்ற பெயரிலும் அப்பாவிப்பெண்கள் இனியும் செந்தூரன்களுக்கு இரையாகக்கூடாது. "இருப்பவர்கள் இருந்தால் இதுவெல்லாம் நடக்குமா" என்பவர்களே இருப்பவர்கள் இருந்தால் ஒரு பெண்ணை தன் நடத்தையால் தற்கொலை செய்யவைத்தவனுக்கு என்ன தண்டனை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அவரின் முகநூல் பதிவுகளின் தொகுப்பினை இங்கே தருகிறேன் அவற்றை கருணை கூர்ந்து பாருங்கள்! அப்பெண் சிரிப்பதை நிறுத்தி பல மாதமாகிவிட்டதை நீங்கள் உணர்வீர்கள்.

இறப்பதற்கு முன் அவர் திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றை இறுதியாய் பதிவேற்றி இருக்கிறார்,

அக்குறள்:-

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

பொருள்:-
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாக் கொண்டதாகும்.

ஆம் நேற்று உயிருடன் இருந்த போதநாயகி யை இன்று இல்லாமல் செய்துவிட்டோம் என்ற அகந்தையை பெருமையாக கொண்ட செந்தூரன்கள் வாழும் உலகுதான் இது. 😢

அப்பாவிப்பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்:- சு.பிரபா







Read more...

பள்ளிவாயல் கட்டுமான நிதியை திருடிய நிர்வாகத்தினர் மீது விசாரணை.

மன்னார் டவுன் ஜும்மாஹ் பெரிய பள்ளிவாசல் காட்டுமான பணியில் பாரிய ஊழல் நடைபெற்று உள்ளதாக ஆதாரபூர்வமான ஆவணங்களுடன் அரசியல் பிரமுகர் குவைதிர் கான் அவர்களினால் வக்பு சபையிலும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அவரது முறைப்பாட்டின் பிரகாரம் மன்னார் டவுன் ஜும்மாஹ் பெரிய பள்ளிவாசலின் கட்டுமானப் பணியின்போது இருந்த பழைய நிருவாகத்தினர்களையும், இன்றைய புதிய நிருவாகத்தினர்களையும் விசாரணைக்காக வருமாறு வக்பு சபையினர்களினால் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

அதன்பிரகாரம் இன்று மாலை மன்னார் நகர ஜும்மாஹ் பெரிய பள்ளிவாசலின் பழைய மற்றும் புதிய நிருவாகத்தினர்கள் விசாரணைகள் செய்யப்பட உள்ளார்கள்.

இந்த விசாரணைகள் அரசியல் தலையீடுகளின்றி மிகவும் நேர்மையாக நடைபெற்றால் ஊழல் விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் யார் ? பள்ளிவாசல் நிருவாகத்தினர்களா ? அல்லது அரசியல்வாதியா ? கட்டுமானப்பணியில் ஈடுபட்ட நிறுவனம் யாருக்கு சொந்தமானது ? பணம் எங்கிருந்து பெறப்பட்டது ? எத்தனை நாடுகள் இதற்காக நிதி வழங்கியது ? போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

அவ்வாறில்லாமல் அரசியல் தலையீடுகளுக்கு கட்டுப்பட்டு விசாரணைகள் நடைபெறுமாக இருந்தால், விசாரணைகள் என்ற நாடகத்துடன் அனைத்து உண்மைகளும் மூடி மறைக்கப்பட்டுவிடும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்பட குறித்த பள்ளிவசலானது 2014.11.24 ஆம் திகதி ராப் பவுண்டேசனால் முதன் முறையாக திறக்கப்பட்டது. அத்துடன் கல்வெட்டும் பதிக்கப்பட்டது. அதே பள்ளிவாசல் மீண்டும் இரண்டு தடைவைகள் திறக்கப்பட்டது. மீண்டும் மூன்றாவது தடவையாக சுபாஹ் நேரத்தில் அரபி சேக் ஒருவர் மூலமாக திறக்கப்பட்டது. அதாவது ஒரே பள்ளிவாசல் பல தடவைகள் திறந்துவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணையானது கொழும்பு டிபீ ஜாயா மாவத்தையில் அமைந்துள்ள வக்பு சபையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது

Read more...

இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்கு 8000 கோடிகளை வழங்குகின்றது அமெரிக்கா!

ஐக்கிய அமெரிக்காவின் மில்லேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை அதாவது சுமார் 8000 கோடி ரூபா நிதியுதவியை இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக வழங்க முன்வந்துள்ளதாக அக் கூட்டுத்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Brock Bierman தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச்சபை அமர்வில் உரையாற்றுவதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்று (24) பிற்பகல் சந்தித்தபோதே மில்லேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவியை வழங்குவதற்கான வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் அதனை அமெரிக்க செனட் சபையின் அனுமதிக்காக முன்வைக்கவுள்ளதாகவும் Brock Bierman தெரிவித்தார்.

செனட் சபையின் அனுமதியை பெற்றுக்கொண்டதன் பின்னர் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் கொழும்பில் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர், அச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பங்குபற்றுவாராயின் தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் நீண்ட காலமாக இலங்கைக்கு வழங்கிவரும் அபிவிருத்தி உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் இந்த நிதியுதவி தொடர்பில் பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை பயணிகள் போக்குவரத்து சேவையின் அபிவிருத்திக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குமான புதிய செயற்திட்டமொன்றை அமுல்படுத்த குறித்த நிதியை முதலீடு செய்ய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, திலக் மாரப்பன ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Read more...

நீங்கள் ஒன்றும் பாதிக்கப்படவில்லை. இடத்தை காலி செய்யுங்கள். சைக்கிள் கொம்பனியை விரட்டிய நீதிபதி.

உண்ணா விரதமிருந்து இறந்த திலீபன் சார்பாக நிகழ்த்தப்படும் நிகழ்வுகள் , நினைவுத்தூபி மற்றும் சுற்று வேலி போன்றவற்றுக்கு தடையுத்தரவிடக்கோரி பொலிஸார் தரப்பில் யாழ் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட விண்ணப்பம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொலிஸாரின் விண்ணப்பத்தை எதிர்த்து சுமத்திரன் மன்றில் ஆஜராகியிருந்ததுடன் குறித்த செய்பாட்டுக்காக அரசு நிதியொதுக்கியுள்ளதாகவும் மாநகர சபையை இவ்விடயத்திற்காக குற்றஞ்சுமத்த முடியாது என்றும் வாதிட்டிருந்தார்.

திலீபனின் நினைவிடத்தை புனரமைப்பது சட்டவிரோதமானதல்ல, பொலிசார் கேட்டுக் கொண்டதன்படி நினைவேந்தலை தடை செய்ய முடியாது, நாளை நினைவேந்தலை நடத்துவதில் எந்ததடையுமில்லையென நீதிமன்று அறிவித்துள்ளது.

இதேநேரம், மன்றில் பிரசன்னமாகிய சைக்கிள் கொம்பனியைச் சேர்ந்த மணிவண்ணன் தலைமையிலான சட்டத்தரணிகள் நால்வர் விவாதத்தில் கலந்து கொள்ள முற்பட்டபோது, நீங்கள் யார் சார்பாக ஆஜராகின்றீர்கள் என நீதிபதி வினவியபோது, நாம் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக என பதிலளித்துள்ளனர். அவர்களின் பதிலை ஏற்றுக்கொள்ளாக நீதிபதி இங்கு ஒருவரும் இவ்விடயத்தில் பாதிக்கப்படவில்லை தங்கள் பிரசன்னம் அவசியமற்றது என நிராகரித்துள்ளார்.


Read more...

கல்முனையில் தமிழருக்கு அநீதி இழைக்கப்படுமாயின் அதை எதிர்ப்பாராம் தேரர். பாறுக் ஷிஹான்

அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றபோது கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமாக இருந்தால் அதனை எதிர்ப்பேன் என கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாராதிபதியும் கல்முனை சிவில் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், அம்பாறை மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத் தலைவராகவும் அம்பாறை வித்தியானந்த பிரிவெனாவின் தமிழ்ப்பாட வளவாளராகவும் இருக்கும் வண.ரன்முதுகல சங்கரட்ண தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய அரசின் நிதியுதவியுடன் கல்முனை மாநகரில் 3400 கோடி ரூபா நிதியில் மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் அப்பகுதி வாழ் தமிழர்கள் மத்தியில் கல்முனை -1 பல்தேவை கட்டடத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அவர்:

அம்பாறை மாவட்டத்தில் கல்முனையில் வாழும் தமிழர்களை திட்டமிட்டமுறையில் அழித்தொழிக்க வேண்டும் என்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக இருந்து வருகின்றார்கள் என்பதை இங்குள்ள மக்களே எனக்கு தெரிவிக்கின்றனர். இதற்காகவே தான் கல்முனை மாநகர சபைக்குட்ட 75 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் மக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் மலசலகூடக் கழிவுகளை அகற்றி சுத்திகரிக்கும் வேலைத்திட்டத்தை மக்கள் செறிந்து வாழும் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிகின்றேன். இத்திட்டம் நல்ல ஒரு திட்டம் தான். காலத்தின் தேவையும் கூட. ஆனால் இவ்வாறான பாரிய திட்டங்கள் அமைக்கப்படும் போது மக்களிற்கான விழிப்பூட்டல்கள் அவசியமாகும். ஆனால் அவை ஒன்றும் இதுவரை எவரும் முன்னெடுக்கவில்லை என்பதே எமது கவலையாகும்.

இப் பிரதேசத்தில் அதிகாரத் துஸ்பிரயோகத்தில் அரசியல் பொருளாதார ரீதியில் பலம் பெருந்தியவர்கள் ஈடுபட முயன்றால் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க போவதில்லை. இன்னுமொரு இனத்தின் உரிமைகளைப் பறித்தெடுக்கின்ற நிலை இத்திட்டத்தில் காணப்பட்டால் இதற்கு நாம் அனைவரும் கட்சிபேதங்களை மறந்து செயற்பட வேண்டும். ஒரு இனம் பாதிக்கப்படாமல் அரச அதிகாரிகள் இன மத குல பேதங்கள் பார்க்காமல் பரந்த மனப்பாங்குடன் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும். அதிகாரங்களை துஸ்பிரயோகம் பண்ணக்கூடாது. மக்கள் செறிவாக வாழுகின்ற பிரதேசங்களுக்கும் அதிகமாக மக்கள் கூடிக்கலைகின்ற இடங்களுக்கும் இந்த கழிவு நீர் முகாமைத்துவ திட்டத்தை அமுல்படுத்த இந்த விடயம் தொடர்பில் மக்கள் பூரண விளக்கத்தினை அளிக்க வேண்டும். அந்த விளக்கத்தினை ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.

இந்த திட்டத்திலுள்ள படித்த சிலருக்கே நன்மைகள் தீமைகள் தொடர்பில் விளக்கமில்லாமல் இருக்கிறது. அவர்களுக்கு இது தொடர்பில் போதிய அளவில் அறிவு இருக்கவில்லை. மலசலத்தை அகற்றி அதனை மீள் சுழற்சிக்குற்படுத்துகின்ற போது அதனால் சூழலில் துர்நாற்றம் எழும் என மக்கள் கருதுகிறார்கள். அவ்வாறே வீடுகளில் இருந்து குழாய்வழியாக பிரதான கழிவு நீர் முகாமைத்துவ சட்டகத்திக்கு அவற்றை நிலக்கீழ்வழியாக கொண்டுவரும் போது குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு சூழல் மாசடையும். அந்த பிரதேசமே துர்நாற்றம் வீசும் என அவர்கள் கருதுகிறார்கள். இதனால் தான் இந்த திட்டத்தை ஆரம்பிக்கின்ற போது மக்கள் அத்திட்டத்தை நிறுத்தும் முயற்சியில் இறங்குகிறார்கள். இதுவே உண்மை.

ஆனால் இந்த கருத்தை தற்போது மக்கள் கருத்தாக தான் முன்வைக்கும் போது, பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸை வசைபாடுவதாகவும், இனவாதம் கதைப்பதாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் எனது நோக்கம் மக்களுக்கு நன்மையான விடயங்களை பெற்றுக்கொடுப்பதாகும். இந்த தேசிய அரசாங்கத்தில் நாட்டில் நல்லிணக்க சக வாழ்வு ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுகிறது. எனவே எதிர்கால சந்ததிகளின் நலனை அடிப்படையாக கொண்டு எமது மக்களிற்கான அபிவிருத்தி திட்டங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.

நான் ஒரு பௌத்த குருவாக மாத்திரமன்றி தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் அயராது உழைத்து வருபவன். நான் ஒரு இனவாதி அல்ல. பல்லின மக்கள் வாழுகின்ற இப்பிரதேசத்தின் அனைத்து மக்களின் மொழி மத கலாசாரத்திற்கு மதிப்பளிக்க பழகிக்கொள்ள வேண்டும். இதனை ஏற்படுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன். அதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொருவரது சிந்தனையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

இங்கு மக்களின் தேவைகளை அறிந்து கல்முனை மாநகர உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் எங்களையும் மக்களையும் அரவணைக்கின்றார். நாமும் அவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். இவருடைய நல்ல சிந்தனையை பாராட்டுகின்றேன்.

கல்முனை மாநகரில் மக்களுக்காக செய்ய வேண்டிய பல அபிவிருத்திகள் எம் கண்முன்னே இருக்கின்றன. அதனை செய்யவேண்டும். எமது பிரதேச மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அதனையெல்லாம் தீர்த்து வைக்கவேண்டும். அதற்காகவேண்டித்தான் இக்கூட்டத்திற்கு அழைத்தவுடன் வந்தேன். கல்முனையில் தமிழ் மக்களுக்கு பாதகமான முறையில் நகர அபிவிருத்தி மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அதனை நான் எதிர்ப்பேன் என்றும் தெரிவித்தார்.

கனேடிய அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் மக்களின் எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்த நாம் அனுமதிக்க முடியாது என்பதே எனது கருத்தாகும்.

எனவே அனைத்து தலைவர்களும் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் ஒத்துழைத்தால்தான் இந்த வேலைத்திட்டத்தை மக்களிற்கு சாதகமாக நிறைவேற்ற முடியும்.

இக்கூட்டமானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமையில் இடம்பெற்றதுடன் இதில் சிவில் அமைப்பு த.தே.கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர்கள் கிராமப்பெரியார்கள் ஆலயங்களின் உறுப்பினர்கள் மற்றும் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







Read more...

Monday, September 24, 2018

அதாஉல்லா வின் அராஜகம். உடையுமா கட்சி?

தேசிய காங்கிரஸ் தலைமை மற்றும் அதன் பிரதி தலைவர் உதுமாலெப்பை ஆகிய இருவருக்கிடையிலான முரண்பாடு தொடர்பாக கட்சியின் முக்கியஸ்தர்களை தொடர்பு கொண்டும் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் ஒன்றின் தோல்வியின் பின்னால் அமைச்சர் அதாஉல்லா கட்சி முக்கியஸ்தர்களுக்கான இடை வெளி வெகுவாக அதிகரித்து வந்தது என்பதும் அதாஉல்லா தனது கட்சியை இனி முன் கொண்டு செல்ல முடியாது எனும் சூழலில் அக்கரைப்பற்று பிரதி மேயராக இருக்கும் அஸ்மி அப்துல் கபூர் தான் தலைமையாக இருக்கின்ற அதாஉல்லா வோடு மிக கடுமையாக உழைத்தார் என்பதும் கட்சி தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார் என்பதும் அனைத்து போராளிகளாலும் ஏற்க கூடியதாக இருந்தது.

பிளவின் தொடக்க புள்ளி. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் போட்டியிட வேண்டுமென உதுமா லெப்பை உள்ளிட்ட அணியினர் விரும்பியதாகவும் இணைந்து போட்டியிடக் கூடாது தனித்து போட்டியிட வேண்டுமென தலைவர் அதாஉல்லா விரும்பியதாலும் அதை நியாய படுத்துகின்ற தேவை அஸ்மி அப்துல் கபூருக்கு இருந்தமையும் ஆரம்பமாக உருவாகிய விடயமாகும்.

அதனை தொடர்ந்து அக்கரைப்பற்று மாநகர வேட்பாளர் தெரிவின் போது சட்டத்தரணி பஹீஜ் உள்ளிட்ட சிலர் மேயர் வேட்பாளராக தங்களை முன்னிறுத்திவரும் சூழ்நிலையில் மேயராக அதாஉல்லாவின் மகன் சக்கி அதாஉல்லாஹ் முன்னாள் மேயர் வர வேண்டுமென பகிரங்கமாக குறிப்பிட்ட சிலரின் கனவுகளில் மண்ணை தூவ அஸ்மி அப்துல் கபூர் தான் காரணமாக இருந்தார் என்பதும் இரண்டாவது விடயம்.

அதே வேளை சட்டத்தரணி பஹீஜ் போட்டியிட இருந்த அக்கரைப்பற்று நகர பள்ளி வட்டார வேட்பாளராக அங்கு எதிரணி வேட்பாளராக சிறாஜ் மசூர் போட்டியிட்டதால் அதாஉல்லா தனது இரண்டாவது மகனான டில்சானை போட்டியிட வைத்தார். அது தேசிய காங்கிரஸின் வெற்றி வியூகமாகவும் அமைந்தது. அதன் பின்னர் அதாஉல்லா தனது மகனை மேயராகவும் தான் கட்டளையிட்டவுடன் ராஜினாமா செய்ய தயாராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அஸ்மி அப்துல் கபூரை பிரதி முதல்வராகவும் நியமித்தார்.

அந்த விடயத்துக்கு எதிராக மேயர் பிரதி மேயர் கனவுகளை சுமந்த சிலரால் டயர்கள் எரியூட்டப்பட்டுகட்சி தலைவருடைய கட்அவுட்களும் அக்கரைப்பற்றில் சிலரால் வீதியில் போட்டு எரிக்கப்பட்டது. இவ்வாறான சூழலில் கட்சி பரவலாக்கம் செய்யப்பட்டு கிழக்கு மாகாணம் முழுவதும் மக்கள் இணைந்து வருவதையும் அவதானிக்க கூடிய சூழ்நிலை உருவானது. பிளவின் இரண்டாம் கட்டம். ஏற்கனவே மாகாண சபைக்கு வேட்பாளராக சட்டத்தரணி பஹீஜ் நியமிக்க கட்சி தலைவரால் வாக்குறுதியளிக்கப்பட்டதாக பஹீஜ் உடைய தரப்பால் வெளிப்படையாக கூறப்பட்டு வந்த நிலையில் அதாஉல்லா சகி தான் வேட்பாளரென சிலர் கூறி வந்தனர்.

உதுமாலெப்பையின் முரண்பாட்டிற்கான புள்ளி. சட்டத்தரணி பஹீஜ் உதுமாலெப்பை ஆகிய இருவருக்குமிடையில் பல சந்திப்புகள் நிகழ்ந்து, தொகுதி அடிப்படையில் மாகாண சபை தேர்தல் நிகழ்ந்தால் அக்கரைப்பற்றில் சகி அதாஉல்லாஹ் போட்டியிட்டால் உங்களது இடம் பறி போகும் எனவும், கட்சி சென்ற முறை அஇமக யுடன் போட்டியிட்டிருந்தால் அட்டாளைச்சேனையில் ஆட்சி அமைத்திருக்க முடியுமெனவும், தங்களுடைய கருத்துக்களை கவனத்தில் கொள்ளாது அஸ்மி அப்துல் கபூரினுடைய கருத்தில் கொள்ளப்படுவதாவும் கூறப்பட்டு இவ்வாறான விடயங்களுக்கு காரணமானவர் அஸ்மி அப்துல் கபூர்தான் எத்தி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கட்சி முக்கியஸ்தர்கள் சிலரையும் தம்மோடு இணைத்து கொள்ள சட்டத்தரணி பஹீஜ் முயற்ச்சித்த வேளை அவர்களால் செய்தி அதாஉல்லா அவர்களின் காதுகளுக்கு எட்டியது. குறிப்பாக இறக்காம அபிவிருத்தி குழு இணைத் தலைவர் மன்சூர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிபாஸ் மூத்த உறுப்பினர் உவைஸ், பாலமுனை வாகிட், புர்கான் ஜேபி, ஹுதா உமர் போன்றவர்களுடன் ரகசிய உரையாடல்கள் தலைவர் அதாஉல்லா விடம் பகிரங்கமாக உரையாடப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து கட்சியினால் ஏற்பட்ட விரிவாக்க நடவடிக்கையின் போது உதுமாலெப்பைக்கு வழங்கப்பட்ட பிரதி தலைவர் பதவியும், சட்டத்தரணி பஹீஜிக்கு வழங்கப் பட்ட பதவியும் அதாஉல்லா அவர்களை தூரப் படுத்துவற்காக நடவடிக்கை மேற்கொள்வதாக கருதி இதற்கான காரணமாக அஸ்மி அப்துல் கபூரின் கருத்துக்களை தலைவர் அதாஉல்லா அங்கீகரிப்பதாகவுமே இந்த பிளவு நடந்ததாக உறுதிப்படுத்த பட்ட கட்சி தகவல் கூறுகின்றன.

அதாஉல்லா உதுமாலெப்பை இருவருக்கான உறவு இவ்வளவுதானா? பஹீஜின் பதவி ஆசையா? அஸ்மியின் மீது இவர்கள் வைக்கும் குற்றச் சாட்டுக்கள் என்ன? அதாஉல்லா வின் மனநிலை என்ன? எதிர் பாருங்கள்.


Read more...

கட்சியில் சுதந்திரமாக இயங்க அனுமதித்தால் பௌத்த சிங்கள வாக்குகளை பெற்றுத்தருவேன். நவீன்

ஐக்கிய தேசியக் கட்சியினுள் தன்னை சுதந்திரமாக இயங்க அனுமதித்தால் சிங்கள பௌத்த வாக்குகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் நான் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு இயங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் கட்சியின் வலுவான விடயங்களை வெளிக்கொணர்ந்து கட்சியை வலுப்படுத்துவேன்.

கட்சியின் இளைஞர் அணி மற்றும் இரண்டாம் நிலை தலைவர்கள் கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டுமென்றே விரும்புகின்றார்கள்.

இவர்கள் மத்தியில் எவ்வித முரண்பாடுகளும் போட்டிகளும் கிடையாது. நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்டு வருவதனால் தேசிய அமைப்பாளர் பதவியை வகிப்பதில் சிரமங்கள் கிடையாது.

கடந்த தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்பட்டது. இதேபோன்று தேசிய ரீதியில் சில திட்டங்களை வகுத்து கட்சியை முன்னோக்கி நகர்த்த முடியும்.

கட்சியின் சில தொகுதி அமைப்பாளர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கட்சியிடமிருந்து கைவிட்டுப் போன சிங்கள பௌத்த வாக்குகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Read more...

எக்சைல் 1984 ; கெடுகுடி சொற்கேளாது- நடேசன்

ஜனநாயகமான கட்டமைப்பற்ற ஆயுத அமைப்புகள் தங்களுக்குள் பிரிவதும் அழிவதும், தாயின் வயிற்றில் குறைபாடான கருவொன்று அபோர்சனாக வெளியேற்றப்படுவது போன்ற இயற்கைச் செயல்பாடாகும். அது போல் இயற்கையின் வலிமையானவை நிலைப்பதும், நலிந்தவை அழிவதுமான டரர்வினியன் தத்துவமாகும் .

இப்படியான டார்வினியன் பரிணாம தத்துவம் இலங்கை தமிழ் அரசியலுக்கும் பொருந்தும். சகோதரஇயக்கங்கள் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டது என்று பலராலும் கூறப்பட்டாலும், அது மிகையானது. ஆனால் அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் விடுதலைப்புலிகளால் வேட்டையாடப்பட்டார்கள் என்பதே உண்மையாகும்.

இரண்டிற்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்கலாம்.

மற்ற இயக்கங்கள் உள்ளக உடைவு(Implosion) மூலம் ஏற்கனவே தங்கள் தலைகளில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு விட்டார்கள். இது இயக்க வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் இனவிடுதலையை நோக்கமாக மட்டுமே வந்த இளைஞர்களைத் துடி துடிக்கச் சுட்டு எரித்ததே விடுதலைப்புலிகள் செய்த பாவகாரியம்.

அந்தப் பாவங்கள் அவர்களை நிழலாகத் தொடர்ந்தது. இறுதியில் மற்றவர்களுக்கு அவர்கள் செய்தது, அவர்களுக்கு இலங்கை அரசால் நடந்தது.

சிலருக்கு வேறுவிதமாக நடந்தது. ரெலோ இளைஞர்களைக் கொலைசெய்த கிட்டு, மாத்தையா என்பவர்கள் வயதாகி இறக்கவில்லை. அதேபோல் முள்ளிவாய்க்காலில் நிட்சயமாக பிரபாகரன் சிறிசபாரத்தினத்தின் இறுதி கணங்களை நினைக்காமல் இருந்திருக்க முடியாது . ஒருவேளை ‘இராஜபக்சாவிடம் நான் பேசிப் பார்க்கிறேன்’ என ஒரு இலங்கை இராணுவத் தளபதியிடம் சொல்லியிருக்கலாம். –

86களில் மிகவும் பலமாக இருந்த ரெலோ இயக்கம் இரண்டாகப் பிரிந்து தனது அழிவைத் தேடிக்கொண்டது. இந்தியாவில் இருந்தபோது அதைப் பார்த்தேன்;கேட்டேன்; ஓரளவு தடுப்பதற்கும் முயன்றேன். கெடுகுடி சொற்கேளாதென்ற வார்த்தைக்கு அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன்.

எனது அக்கால நினைவுகளை மீட்டும் போது வயிற்றுப் பேதிக்காக இரவு குடித்த கசப்பு மருந்து வாயில் வருவது போன்ற உணர்வுகள் ஏற்படும்.

86ம் ஆண்டுகளில் நானும் டாக்டர் சிவநாதனும் தமிழர் மருத்துவ நிலையத்தின் வேலைகளோடு ஒரு வித கட்டைப் பஞ்சாயத்து வேலை என இந்தியத் தமிழிலும், ஊர் விதானை வேலை என நம் ஊர்த் தமிழிலும் சொல்லக்கூடிய வேலைகளில் ஈடுபட்டிருந்தோம். அவை நாங்களாக விரும்பிச் செய்த வேலைகளில்லை. அத்துடன் எமது தொழித் திறமைக்கு உட்பட்டவையல்ல. எந்த லாபமும் இல்லை. ஆனால் இறுதியில் மனக்குழப்பத்தை உருவாக்கி, அன்றிரவு கைக்காசை செலவழித்து மதுவின் மடியில் இருவரையும் கொண்டு நிறுத்தியிருக்கும்.

மதுவைப்பற்றிச் சொல்லாது என் இந்திய நினைவுகளைக் கடந்துபோக முடியாது.

மதுவில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் நியாயமான வித்தியாசமுள்ளது. இலங்கையில் வடிசாராயம் கூட பக்தி சிரத்தையோடு வடிக்கப்பட்டிருக்கும். அதிலும் தென்னிலங்கையர்களின் கைபக்குவம் விஷேசமானது . தங்கொட்டுவ பகுதியில் வடிக்கப்பட்டவை. தற்போதைய சிங்கிள் மோல்ட்டைவிடச் சிறந்தவை. ஆனால் இந்தியாவில் எல்லாவற்றையும் குடிக்க முடியாது. இன்றுபோல் வெளிநாட்டு மதுக்கள்
இல்லாத காலம். அடுத்தநாள் தலையிடிக்காது. எழும்பி வேலைக்குச் செல்லவேண்டுமென்ற ஆவலில் எமக்குப் பொருந்திவந்த இந்திய குடிபானம் ரோயல் சாலஞ் எனப்படும் விஸ்கிதான். விலை அதிகமானது. பார்லியில் இருந்து வடிப்பது விஸ்கி. ஆனால் ரோயல் சாலஞ் பெரும்பாலும் இருப்பது கரும்பிலிருந்து வரும் மதுசாரமே- அப்படியென்றால் ரம் அல்லது சாராயம் என்றுதானே போடவேண்டும்? இந்தியாவில் பார்லி விளையாது-கரும்பு ஏராளம். இறக்குமதியான பார்லியுடன், கரும்பில் இருந்துவரும் மதுசாரத்தைக் கலந்து தயாரித்தார்கள். அக்காலத்தில் எமக்குத் ரோயல் சாலஞ் தரமானதாகத் தெரிந்தது. அத்துடன் எனக்குப் புகைபிடிக்கும் பழக்கமும் இருந்தது.

நாங்கள் இருவரும் செய்த விதானை வேலைகள் பல தரப்படும்.

சம்பந்தப்பட்டவர்களது பெயர்களை சொல்லமுடியாததால் தொழில் வகையறாக்களை இங்கு தருகிறேன்.

பல முறை இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்குச் சென்னையூடாக செல்லவிருந்த ஆண்கள், பெண்களுக்கு உதவி செய்தோம். அக்காலத்தில் இயக்கங்களில் உள்ளுடைவுகளால் ஒரு சாரரும், விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட இயக்கங்களில் இருந்து கூட்டில் கலைந்த தேனிகளாக மற்றொரு தொகையினரும் சென்னையில் இருந்து வெளிநாடு செல்லத் தவித்தார்கள். போலிக் கடவுச் சீட்டுகள், எக்சிட் பேர்மிட்டுகள் பலரது தேவைகளாக இருந்தது.

தூள் வியாபாரம் செய்த ஒருவரிடம் விடுதலை இயக்கம் ஒன்று, சென்னையில் பணம் கேட்பதற்காகக் கடத்திவிட்டார்கள் அவரின் மனைவியர் தனது கைக்குழந்தையுடன் எங்களுடன் வந்து கெஞ்சியபோது அவர்கள் கேட்ட தொகையைப் பல மடங்கு குறைக்க உதவினோம்.

எம்மோடு நண்பனாக இருந்த ஒருவனை பின்பு இங்கிலாந்து கடவுச் சீட்டில் கனடா செல்வதற்கு உதவினோம். மெல்பேனில் பிற்காலத்தில் ரைம்ஸ் சஞ்சிகை தபாலில் எனது வீட்டுக்கு வரும்போது ஒரு காலத்தில் ஆப்பிரிக்க இனத்தவனது ஆங்கில கடவுச்சீட்டு ரைம்ஸ் சஞ்சிகையின் நடுப்பக்கத்திற்குள் வந்ததை இன்னமும் நினைக்க வைக்கிறது.

விடுதலைப்புலிகள் தமிழகத்தில் பத்து அணிகளைப் பயிற்றுவித்தார்கள்.அதில் கடைசி அணியில் இருந்து பலர் விலகினார்கள். தப்பிவந்தவர்கள், மற்றும் தண்டிக்கப்பட்டதால் ஓடியவர்கள் எனப் பலருக்கு உதவினோம்.

சில காதல் பிரச்சனைகள் கூட எம்மிடம் வந்தது. அவையே மிகவும் கடினமானதாக இருந்தது.

நான் குடும்பமாக இருந்ததால் பெரும்பாலான விடயங்களை நேரடியாக என்னிடம் வருவதில்லை. பல விடயங்களை டாக்டர் சிவநாதன் கொண்டு வந்து சேர்ப்பார். அவைகள் இறுதியில் எம்மிருவரது பிரச்சனையாகிவிடும். விடுதலை இயக்கங்களில் உள்பிரச்சனைகள் ஏற்படும்போது அவை எம்மிடம் தேடிவரும்.நாங்களும் தேடிப்போவதுண்டு.

86ம் ஆண்டு மே மாதம் ஆறாம் திகதி ரெலோ சிறிசபாரட்ணம் இறந்த நாளாகும். இதற்குச் சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இது.

இரவு பத்து மணிக்குச் சென்னை நகரம் இராட்சத மிருகமாக ஒலி, ஒளியுடன், தூசியையும் துர்மணத்தையும் எழுப்பியபடி அசைந்து கொண்டிருந்தது. லிபேட்டி தியேட்டரருகே இருந்த வீட்டிற்குச் செல்வதற்காக எனது பழைய TVS 50 பெரிய பாதையை கடந்து வீட்டிற்குச் செல்லும்போது EPIC தகவல் நிலையத்தருகே கருப்பு பாண்டும், வெள்ளை சட்டை அணிந்து சிந்தனை தேங்கிய முகத்துடன் என்னெதிரே நடந்து வந்துகொண்டிருந்த கொண்டிருந்த ஈழமக்கள் விடுதலை முன்னணித் தலைவர் பத்மநாபாவைக் கண்டதும் வண்டியை நிறுத்தினேன். வழக்கமாக யாரோடாவது சேர்ந்து நடப்பவர் தனிமனிதராக நடந்து வந்து கொண்டிருந்தார் என்பது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“ரஞ்சன் ரெலோவிற்குள் பிரச்சனை போலிருக்கு, தாசிற்கும் பொபிக்கும் நல்லா இல்லை போலிருக்கு (ரெலோவின் ராணுவ பொறுப்பாளர் இருவரும்).

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” வருகிறீர்களா சிறியிடம் போவோம்?

“ஓம்” எனத் தலையசைத்ததும் உடனே எனது TVS 50 இல் ஏறிவிட்டார் பத்மநாபா. தலைக்கு ஹெல்மெட் இல்லை என்பதால் எங்கள் TVS 50 மெதுவாகச் சென்றது. அல்லாவிட்டாலும் அது பழைய வண்டி வேகமாகப்போகாது. போகிற வழியில் கேட்டேன் ‘பாதுகாப்புக்கு ஏதாவது ஆயுதம் உள்ளதா? ‘

“இல்லை. தோழர் நாம் ஏன் பயப்பட வேண்டும்?

அப்பொழுது எனது உடல் விறைத்தது. இதயத்துடிப்பு பல மடங்காகியது.

எவ்வளவு விரைவாக சாலிக்கிராமம் செல்லமுடியும்? மாரி காலத்து நத்தைமாதிரி ஊர்கிறதே TVS 50! இதைவிட வேகமாகச் செல்லாது. குறுக்கு வழியில் சாலிக்கிராமம் செல்வோமா? வழியில் ஒரு ஓட்டோக்காரன் சாலையைக் கடந்தவனை ‘ஏய் வூட்டை சொல்லினையா’ என்றபோது வீட்டில் நானும் எதுவும் சொல்லாது வந்தது நினைவு வந்தது.

எனப்பல நினைவுகளுடன் மவுனமாகினேன் . மனத்தில் பயம் போகவில்லை .ஏற்கனவே இயக்கங்கள் இந்திய மண்ணில் கொசு அடிப்பது போல் தங்களுக்குள்ளும் மற்றவர்களையும் கொலைகள் செய்து விட்டிருந்தார்கள். அதை விட கடற்கரைவரையும் கடத்திச் சென்று நடுக்கடலில் புள்ளிவிவரமற்று கல்லில் கட்டி இறக்கியும், கொலை செய்யும் காலத்தில் இந்த மனிதன் தனது பாதுகாப்பைப் பற்றி கவலைப்படவில்லை. இதில் நானும் மாட்டிக் கொண்டேனே! மனத்தின் எண்ணங்கள் ஒளியின் வேகத்தில்ப்பாய , ரெலோ அலுவலகம் இருந்த சாலிக்கிராமம் நோக்கி ஊர்ந்தோம்.

ரெலோ அலுவலகத்திலிருந்தபோது இரவு பத்தரை மணியிருக்கும். அடுத்த வீட்டிலிருந்து ஒரு குழந்தையைக் கையில் ஏந்தியபடி சிறி சபாரட்ணம் வந்தார். அருகில் காண்பது முதல்தடவை. நீலக்கோட்டுச் சட்டை நினைவிருக்கிறது. அந்தப்பிள்ளை ஏற்கனவே இறந்த ரெலோ அங்கத்தவரது பிள்ளையென்றார்.

நாலுமணிவரையும் பத்மநாபாவும் சிறிசபாரத்தினமும் பல விடயங்களைப் பேசினார்கள். இப்படி எழுதுவேன் என்றால் குறித்து வைத்திருப்பேன்.

ஈழவிடுதலையில் இவர்கள் முக்கியமானவர்கள் என்ற எண்ணம் மனத்தில் ஓடியது. நான் இயக்கத்தைச் சாராதவன் என்ற எந்தத் தயக்கமுமின்றி நேரங்கள், காலங்கள், எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரிலும் மதிப்பு வைத்திருந்தேன். uேசாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது இதயத்தில் முழுக்க ரெலோ உடையப் போகிறது. இந்தச்சந்திப்பால் ஏதாவது சுமுகமான முடிவு வரவேண்டும் என்பதே நிறைந்திருந்தது. பாலஸ்தீன இயக்கங்கள் உடைபட்ட கதையை படித்திருந்தேன் .

ஐந்து மணிநேரம் பத்மநாபா சிறியிடம் பேசியது “உங்கள் உட்பிரச்சனையை பேசித் தீருங்கள் ” என்பதுதான். அமைதியாகத் தலையாட்டியபடி கேட்ட சிறிசபாரத்தினம் அன்று காலையில் கடற்கரை செல்வதாக சொன்னார். நானும் பத்மநாபாவுடன் ஏதோ ஒன்றைச் செய்துவிட்ட திருப்தியில் ஒளியற்ற அதிகாலையில் கோடம்பாக்கம் திரும்பினோம். இரவில் வீடு வராததால் முகம் சுருங்கிய மனைவி மீண்டும் சுமுக நிலையடைவதற்கு பல நாட்கள் சென்றன. வீட்டில் மனைவிக்கு மகிழ்சியைத்தர ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் சிகரெட்டைப் புகைப்பதை அந்த ஒரு மாதகாலமாக நிறுத்தியிருந்தேன் . மனைவிக்கு எனது இருமலைக் கேட்காத ஒரு மாதகாலமது .

அந்த மாதத்தில் ஒருநாள் விடுதலைப்புலிகள் ரெலோவை அடிப்பதாக செய்தி வந்தது . ஈழமக்கள் விடுதலை முன்னணியினர் வயலஸ் தொலைவாங்கி வைத்திருந்த இடத்திற்குப் போனேன். அங்கிருந்தவர்கள் எனது காதில் ஒலிவாங்கியை வைத்தார்கள் . அது ஒரு அதிகாலை நேரம் . ஒரு மணி நேரமாகக் காதில் வைத்து இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அடையாற்றில் உள்ள விடுதலைப்புலிகளுக்கும் நடந்த சம்பாசணையை கேட்க முடிந்தது. கிழக்கு மாகாணத்தில் மூதூர் விடுதலைப்புலிகளுக்குப் பொறுப்பான கணேஸ் என்பவர் ஏற்கனவே கிழக்குமாகாணத்தவர்கள் பலர் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டதால் மேலும் அவர்களைக் கொலை செய்வதற்குத் தயங்கிய விடயம் எனக்கு அவர்கள் பேச்சில் தெரிந்தது. ஆனால் அதற்கு எதிராகப் பல தூசண வார்த்தைகள் அடையாற்றில் இருந்து தெற்கு நோக்கி வானலைகளில் அனுமானாகப் பறந்தது.

மிகவும் மனமுடைந்து அந்த இடத்தைவிட்டு வெளியே வந்தேன். எதிரில் இருந்த ஒருவரிடம் பில்டர் அற்ற சார்மினார் சிகரட் வாங்கி நெஞ்சுக்குள் பலமாக இழுத்தேன். புகையும் நிக்கொட்டினும் ஒரு மாதத்திற்குப்பின் புது அனுபவமாக இருந்தது. சென்னையில் அதிகாலையில் மட்டுமே சிகரட்டை அனுபவிக்கமுடியும்.

யாழ்ப்பாணம் சென்ற சிறிசபாரத்தினம் தாசை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் கொலை செய்ததும் பின்பு சிறியுடன் இருநூறுக்கு மேற்பட்டவர்களைப் புலிகள் சுட்டுக் கொன்றதும் சரித்திரமான சம்பவங்களாகும்.

ஈழமக்கள் விடுதலை முன்னணியினர் பலர் கொதித்தபடி விடுதலப்புலித்தலைவர் பிரபாகரனை துக்கியாவது இந்தக் கொலைகளை நிறுத்த முயன்றபோது பத்மநாபாவால் அது தடுக்கப்பட்டதாக அறிந்தேன். சிறி அன்றிரவு பேசிய போது சக்தி வாய்ந்த பல ஆயுதங்களை இந்தியர்கள் தந்ததாகவும் அவற்றை திருகோணமலை பிரதேசத்தில் பாவிக்கும்படி சொல்லியதாக கூறியதைக் கேட்டேன். மேலும் சிறியினது வார்த்தையில் இலங்கைக்குப் போகும்படி ரோவின் ( இந்திய உளவுத்துறை)அறிவுறுத்தல் என்பதே எனக்குப் புரிந்தது. . இப்படியானபோது விடுதலைப்புலிகள், ரெலோ இயக்கத்தை அழித்ததை இந்தியர்களால் தடுத்திருக்கமுடியும். குறைந்தபட்சமாக சிறி சபாரட்ணத்தைப் பாதுகாத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. ரோவின் அலுவலகத்தில் ரெலோவின் கெஞ்சியதாக நாராயணசாமியின் ரைகேர்ஸ் ஒவ் லங்காவில் உள்ளது.

ரெலோ விடயத்தில் 86 ல் அப்படி நடந்துகொண்ட இந்தியா, 2009 ல் வேறுவிதமாக நடந்துகொள்வார்கள் என விடுதலைப்புலி ஆதரவாளர்களோ விடுதலைப்புலிகளையோ நினைப்பது முரண்ணகையல்லவா ? பலமானவை பலமற்றவைகளை அழிப்பது விதியல்லவா? வரலாறு அதையே காட்டியுள்ளதல்லவா?

Read more...

Sunday, September 23, 2018

றிசாட்டின் காடழிப்பினால் வில்பத்து வனத்திலுள்ள குளங்கள் வற்றுகின்றது. விலங்கினங்களின் உயிருக்கு ஆபத்து.

வில்பத்து வனப்பிரதேசத்திலுள்ள செயற்கைக்குளங்கள் பலவற்றின் நீர் வற்றிவருதாகவும், இதற்கான காரணம் அமைச்சர் றிசாட்டினால் மேற்கொள்ளப்பட்ட காடழிப்பே என சிங்கள இணையத்தளம் ஒன்று சாடியுள்ளது.

குறித்த செய்தியில், வனப்பிரதேசத்தில் 42 இரண்டு நீர் தேங்கு நிலைகள் உள்ளதாகவும் அவற்றில் 20 பலமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வில்பத்து பூங்காவின் வின் முகாமையாளர் சம்பத் லக்ஸ்மன் பெரேரா தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்த அரசின் செல்லப்பிள்ளையாகவிருந்து வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கென றிசாட் பதுயூதீன் லட்சக்கணக்கான ஏக்கர் காணிகளை பெற்றுக்கொண்டார் என்பது யாவரும் அறிந்தது.

குறித்த காணி விடயத்தில் றிசாட் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பதும் விடயம் நீதிமன்றவரை சென்றிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


Read more...

நெடுந்தீவில் குதிரைகள் குடிக்க நீரிண்றி இறக்கையில் பொன்சேகா குளிரூட்டப்பட்ட வாகனங்களில் சவாரி. பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள குதிரைகளைப் பராமரிக்க மற்றும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் எவரும் அக்கறையின்றி உள்ளதாக அப்பகுதி மக்கள் மிக அதிருப்தியடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

நெடுந்தீவில் வரட்சி காரணமாக குதிரைகள் பல உயிரிழக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளமை யும் உரிய பராமரிப்பு இன்மையினால் ஆகும் என குற்றம் சுமத்துகின்றனர்.

இப்பகுதியில் குதிரைகள் இறப்பதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளோ அன்றில் அவற்றை பராமரிப்பதற்கான உருப்படியான எச்செயற்பாடுகளோ வனஜீவராசிகள் திணைக்களத்திரால் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கும் மக்கள் திணைக்களத்தினர் இவ்விடயத்தில் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த நெடுந்தீவுக் குதிரைகள் போத்துக்கேயரது ஆட்சிக் காலத்தில் அவர்களால் எடுத்துவரப்பட்ட குதிரைகளின் வழித்தோன்றல்களாக காணப்படுவதுடன் மிக நீண்டகாலமாக நெடுந்தீவில் வாழ்கின்றமையினால் இக்குதிரைகள் இப்பிராந்தியத்துக்குரிய தனித்துவமான ஒரு ரகமாக உயிரியலாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இக்குதிரைகள் சுற்றுலாச் சிறப்பு மிக்க நெடுந்தீவில் சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற உயிரியற் சொத்தாகவும் உள்ளது. மேலும் அங்கு காணப்படும் குதிரைகளை அப்பகுதி மக்கள் சவாரி செய்வதற்கும் மாடுகள் கலைப்பதற்கும் பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த குதிரை இனங்களை பாதுகாக்க முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையிலான ஒரு குழுவை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக.னேஸ்வரன் நியமித்திருந்தார். இக்குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் வை.தவநாதன் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் நெடுந்தீவு பிரதேச செயலர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இவர்களும் ஏலவே குதிரைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்த நிலையில் எந்த வேலைத்திட்டமும் ஒழுங்காக மேற்கொள்ளப்படவில்லை.

இக்குதிரைகள் பாதுகாக்கப்பட்ட மரபுரிமைச் சொத்தாக தேசிய மரபுரிமைத் திணைக்களத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இக்குதிரைகளை வேறிடங்களுக்கு கொண்டு செல்வதுசட்டவிரோதமாகும்.
ஆனால் ஒரு சிலரினால் இவை கடல் மார்க்கமாக கடத்திச் செல்லப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். இதே போன்று நெடுந்தீவுக்கே உரித்தான இவ்வாறான குதிரைகள் இவ்வாறு தொடர்ச்சியாக வேறுபகுதிகளுக்கும் கடத்தபட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்படுகிறது.

உல்லாசப் பயணிகளுக்கான கேந்திர நிலையமாக நெடுந்தீவை மாற்றுவதற்கான நடவடிக்கைகளைதொல்பொருள் திணைக்களத்தினரும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் இக்குதிரைகளின் நலன்களில் எவ்வித அக்கறையும் செலுத்தியதாக தெரியவில்லை.

தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வறண்டு போய் இருக்கின்றன.குதிரைகளுக்கு குடிப்பதற்கு நீர் இல்லாமலும் மேய்ச்சலுக்கென போதிய புல் இல்லாமலும் குதிரைகள் இறப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

மிக நீண்டகாலமாக நெடுந்தீவில் வாழுகின்ற குதிரைகள் இப்பிராந்தியத்துக்குரிய தனித்துவமான ஒரு ரகத்தைச் சேர்ந்தது என அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 50 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட சுற்றுலா சிறப்பு மிக்க நெடுந்தீவில் 400க்கும் மேற்பட்ட குதிரைகள் இருப்பதாகக் கணிப்பிடப்பட்டிருக்கின்றது














Read more...

கொலைகாரர்களும் நினைவுகூரப்படக்கூடியவர்கள் என வாதிடச் செல்கிறார் சுமந்திரன்!

புலிகள் அமைப்பின் யாழ் மாவட்ட அரசியல் துறை என்ற பெயர்கொண்டிருந்த கொலப்படைக்கு தலைவராக இருந்தவர் இராசையா பார்த்தீபன் என்ற திலீபன். இவர் இந்திய இராணுவத்தினருக்கு எதிராக நீராகரம் இன்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்தார் என்பது புலிகள் சார்பு தமிழ் ஊடகங்களும் புலிகளின் முதுகில் பயணம் செய்து தமது அரசியல் இலக்கை எட்ட எத்தனிக்கும் அரசியல்வாதிகளும் நமக்கு சொல்லித்தருகின்ற கதை.

தமீழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர்கொண்டு செயற்பட்ட அமைப்பு எந்த மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்றோம் என்று குறிப்பிட்டார்களோ, அந்த மக்களின் அடிப்படை உரிமைகளில் பிரதானமான வாழ்வுரிமை உட்பட சகலவிதமான உரிமைகளையும் பறித்தனர், மட்டுப்படுத்தினர் என்பது யாவரும் அறிந்த உண்மை.

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனிதவிரோத செயற்பாடுகளுக்கு தளபதியாக இருந்தவர்தான் திலீபன். திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகள் அவர் உயிரிழந்த நல்லூரில் இடம்பெற்று வருகின்றது. இந்நிகழ்வானது அரசியல் கட்சிகள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு மேற்கொள்ளப்படுகின்றதோர் நிகழ்வென்பதை ஆரம்ப நிகழ்வுகளின்போது சம்பந்தப்பட்ட தரப்பினர் ரகளையில் ஈடுபட்டமையினூடாக தெளிவாகியுள்ளது.

இந்நிலையில் நல்லூரில் அமைந்துள்ள முன்னாள் பயங்கரவாதியான திலீபனின் நினைவிடத்தில் வரும் 27ம் திகதி நினைவு நிகழ்வை நடத்துவதற்கு தடைவிதிக்குமாறு கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிவான் மன்றில் யாழ்ப்பாணம் பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர்.

அத்துடன், நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளிலான வேலி மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள பந்தல், திலீபனின் உருவப் படத்தை அகற்றுவதற்கான கட்டளையை யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளருக்கு வழங்குமாறும் நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர்.

யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னிலையாகி இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவானிடம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை முன்வைத்தனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானின் சமாதான அறையில் இந்த விண்ணப்பம் முன்வைக்கப்பட்டது.

'இலங்கையிலும் உலக நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரை நினைவு கூருவதற்கு நல்லூரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸாரின் புலனாய்வுத் தகவல்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளது.

பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரான திலீபன், உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த நல்லூரில் இந்த நினைகூரல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அதற்காக நல்லூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தைச் சுற்றி இரும்புக் கம்பிகளிலான வேலி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதற்கு அருகாமையில் பந்தல் இடப்பட்டு மேசையின் மேல் திலீபனின் உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவுகூரலை நடத்த தடை உத்தரவு வழங்கவேண்டும். அத்துடன், யாழ்ப்பாண மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் அந்தச் சபையின் ஆணையாளரின் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக இரும்புக் கம்பிகளால் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன, பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றை அந்தப் பகுதியிலிருந்து அகற்றுவதற்கு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளருக்கு உத்தரவிடவேண்டும்' என்று பொலிஸார் தமது விண்ணப்பத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாண நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளரை வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.

நீதிமன்றின் அழைப்புக் கட்டளை யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளருக்கு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யுசிங்கம் தலைமையிலான சட்டத்தரணிகள் இந்த வழக்கில் முன்னிலையாகி பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு ஆட்சேபனையை முன்வைக்கவுள்ளதுடன் குறித்த அணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் முன்னிலையாகி நினைவுகூருவதற்கு உரிமையுண்டு என்று மன்றில் சமர்ப்பணம் செய்யவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

இங்கு எவரை நினைவுகூர்வதற்கு எவருக்கு உரிமையுண்டு? அதற்கு அரச அனுசரணை வழங்கமுடியுமா?
திலீபன் நினைவுகூரப்படுகின்றபோது ஏனையவர்களின் அடிப்படை உரிமைகளை அது மீறுவதாக அமையவில்லையா?
இந்த நினைவுகூரலானது ஒர் கட்டாயத்திணிப்பா?
குறித்த நினைவுகூரலானது திலிபனால் கொலைசெய்யப்பட்ட உறவுகளை நிந்திப்பதாக அமையாதா என்ற கேள்விகளுக்கான பதிலுடனா பா. உ. சுமந்திரன் தனது சமர்ப்பணத்தை முன்வைக்கவுள்ளார்.

திலீபன் பயங்கரவாத அமைப்பொன்றின் முன்னணித் தளபதியாக பல்வேறு கொலைகளில் நேரடியாக தொடர்புபட்டிருந்ததோர் கொலைகாரன். குறிப்பாக புலிகள் இயக்கத்தினர் வடகிழக்கில் செயற்பட்ட ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புக்களை தடைசெய்தபோது, அவ்வியக்கங்களை சேர்ந்த உறுப்பினர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்ததில் நேரடியாக சம்பந்தப்பட்ட மற்றும் அதற்கான ஆணைகளை வழங்கிய பயங்கரவாதி.

யாழ் மாவட்டத்தை உலுக்கிய கந்தன்கருணை படுகொலை மற்றும் ரெலோ உறுப்பினர்களை யாழ் வீதிகளில் உயிருடன் டயர் போட்டெரித்தது போன்ற கொலைகளில் திலீபன் நேரடியாக தொடர்புபட்டிருப்பது யாவரும் அறிந்த உண்மை. இவ்விடயங்களில் திலீபன் நேரடியாக சம்பந்தப்பட்டதை நிரூபிக்க இன்றும் கண்கண்ட சாட்சிகள் உண்டு.

திலீபன் எனும் கொலைகாரனை நினைவுகூருவதானது திலீபனால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை நிந்திப்பதாக அமைகின்றது. திலிபன் குறித்த பாதிக்கப்பட்டவர்களுக்கு கொலைகாரனாகவே தென்படுகின்றான், இந்நிலையில் அம்மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் சுமந்திரன் அவர்களது விருப்புக்கு மாறாக திலீபனை நினைவுகூரலாம் அல்லது திலீபன் தியாகி என்று வாதிட முன்வருவது மனிதகுலத்திற்கு எதிரான செயலாகும்.

ஒரு தரப்பு மக்களால் மனிதகுல விரோதி என அறியப்படுகின்ற திலீபனை நினைவுகூர்வதால் ஒரு தொகை மக்கள் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர் என்பதை கருத்தில்கொண்டு அதற்கான அனுமதியை நீதிமன்று மறுக்கும் என அம்மக்கள் எதிர்பார்கின்றனர்.


Read more...

உழைப்புக்கேற்ற ஊதியம் கோரிய ஆர்ப்பாட்டத்தில் பிராயச்சித்தம் கோரிய சிறிதரன்.

தோட்டதொழிலாளர்களுக்கு நியாயமான வேதனத்தை வழங்ககோரி தொழிற்சங்களும் பல அமைப்புகளும் இனைந்து தலவாகலையில் பாரிய ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டது. முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக 23.09.2018 இன்று ஞாயிற்றுகிமை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்த்திற்கு தலவாகலை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் தமது வியாபார ஸ்தாபனங்களை மூடி ஆதரவு வழங்கின.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சிறிதரன் கலந்துகொண்டு மூக்குடைபட்டார். மலையக மக்களை வடக்கத்தேயர்கள் என்ற பேச்சுவழக்கிலுள்ள தரம்குறைந்த வார்த்தை பிரயோத்தை பயன்படுத்தி சிறிதரன் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தார் என்பது யாவரும் அறிந்த விடயம். இவ்விடயத்தினால் விசனமடைந்த கிளிநொச்சியில் வாழ்துவருகின்றது மலையக மக்கள் எதிர்வரும் தேர்தலில் தகுந்த பதிலளிப்போம் என்று கங்கணம்கட்டி நிற்கின்றனர். தேர்தல்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பிராயச்சித்தம் கோரிவிடலாம் என்ற நப்பாஷையில் சிறிதரன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என நம்பிய இளைஞர்கள் சிறிதரனை பார்த்து ஊழையிட்டனர்.


தோட்ட தொழிற்சங்கங்கள் , சிவில் அமைப்புக்கள் மற்றும் ஆசிரியர் சங்கம் ஆகியோர் இனைந்து இந்த ஆர்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.


தோட்ட்தொழிலாளர்களுக்கு வழங்கபடுகின்ற ஒரு நாள் சம்பளமான 730 ரூபாவானது மாதம் ஒன்றுக்கும் 25 நாட்கள் வேலைசெய்தால் மாத்திரமே வழங்கப்படுவதாகவும், குறித்த நிபந்தனை நீக்கப்படவேண்;டும் என்றும் கோஷம் எழுப்பினர்.


பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தமானது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை முதலாளிமார் சம்மேளனத்துடன் கைச்சாத்திடபடுகிறது அதன் அடிப்படையில் முதலாளிமார் சம்ளேனத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நியாயமான சம்பளத்தினை பெற்று கொடுக்கவேண்டுமெனவும் இந்த ஆர்பாட்டத்தின் போது வலியுறுத்தபட்டது.



ஆர்பாட்டத்தின்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்ப மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதகிருஸ்னன், மற்றும் பெருந்திரளான தோட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பழனிதிகாம்பரம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்னன் ஆகியோர் தெரிவிக்கையில், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான சம்பளத்தை முதலாளிமார் சம்மேளனம் வழங்காவிடின் பாரிய ஆர்பாட்டங்களை மேற்கொள்ள வேண்டி நேரிடும்மென தெரிவித்தனர்.



இதேவேளை மக்கள் விடுதலை முன்னனியும் தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கபட வேண்டுமென வலியுறுத்தினர்.









Read more...

Saturday, September 22, 2018

ஊர்க்குப்பை அள்ளவேண்டிய அரசியல்வாதி வீட்டுக்குப்பை அள்ளாததால் ஏறுகின்றார் குற்றவாளிக்கூண்டில்.

கிராம சபை தொட்டு மாநகர சபை வரைக்கும் மக்களால் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இவர்களுக்கு மக்கள் வழங்கும் ஆணை யாதெனில் „அள்ளு குப்பை'. ஆனால் அவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றவர்களில் எத்தனை பேர் கழிவு அகற்றுவதற்கும் பிரதேசத்தை துப்பரவாக வைத்திருப்பதற்கு உழைக்கின்றார்கள் என்பது கேள்விதான்.

இந்நிலையில் யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தனது சுற்றுக்சூழலை டெங்கு பரவக்கூடிய வகையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உட்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (20) சுகாதார துறையினர் பொலிஸ் உத்தியோகத்தர் சகிதம் யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கலிமா வீதியில் தற்காலிகமாக வசித்து வந்த யாழ் மாநாகர சபையின் த.தே.கூ உறுப்பினரான எம்.எம்.எம் நிபாஹிரின் வீடுவளவினை பரிசோதித்தபோது அவரது வீட்டில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்தக்கூடிய எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலைமையே காணப்பட்டுள்ளது.

அது தொடர்பில் உத்தியோகித்தர்கள் நடவடிக்கையில் இறங்கியபோது, அவர்களை அடித்து விரட்ட முற்பட்டுள்ளார், பிரதேசத்தையே துப்புரவாக வைத்திருப்பேன் என்று வாக்கு பெற்று மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகின்ற சபை உறுப்பினர்.

தொடர்ந்து உத்தியோகித்தர்களுடன் வந்திருந்த பொலிஸார் மாநகர சபை உறுப்பினரை எச்சரித்ததுடன் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறும் உத்தியோகித்தர்களை பணித்துள்ளனர்.

இதே வேளை குறித்த மாநகர சபை உறுப்பினர் கடந்த யாழ்ப்பாண மாநகர சபை தேர்தலில் 10 ஆம் வட்டார வேட்பாளராக போட்டியிடும் போது புத்தளத்தில் நிரந்திர வதிவிடத்தை கொண்டிருந்தார் என்கின்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற இவ்வுறுப்பினர் அதிகமான நாட்களில் வெள்ளை உடைகளையே விரும்பி அணிவதாகவும் ஆனால் தனது வீட்டு சூழலை சுத்தமாக வைத்திருக்க தெரியவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது.






குறித்த உறுப்பினருக்கு மக்கள் மாலை அணிவித்து அழைத்துவருவதை படத்தில் காண்கின்றீர்கள்.

Read more...

Friday, September 21, 2018

ஆங்கிலம் தெரியாது என்ற அனந்திக்கு, வருகின்றது மேலுமோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.

வட மாகாண உறுப்பினரான டெனீஸ்வரனை பதவிநீக்கம் செய்திருந்தார் வடமாகாண முதல்வர். அவ்வாறு பதவிநீக்கம் செய்தமை தவறானது என நீதிமன்று தீர்பளித்திருந்ததுடன் அவரை தொடர்ந்தும் அமைச்சராக செயற்பட அனுமதிக்குமாறு நீதிமன்று ஆணையிட்டிருந்தது யாவரும் அறிந்தது.

குறித்த நீதிமன்ற ஆணையை நிறைவேற்றாமை தொடர்பில் நீதிமன்றை அவமதித்த வழக்கொன்று முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்கனேஸ்வரன் மீது தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பிரதிவாதிகளாக மேலும் அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்பத்திரமும் ஏனைய ஆவணங்களும் ஆங்கில மொழியில் உள்ளனவென்றும் தனது கட்சிக்காரரான அனந்தி சசிதரனுக்கு ஆங்கிலமொழி தெரியாது என்றும் தெரிவித்த அனந்தி சசிதரனின் வக்கீல் கணேசராஜா, குற்றப் பத்திரத்தில் உள்ள விடயத்தை புரிந்துகொண்டு குற்றவாளியா, சுத்தவாளியா என்று பதிலளிக்க முடியாத நிலையில் தனது கட்சிக்காரர் உள்ளதாக மன்றில் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் டெனீஸ்வரனின் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, அனந்தி சசிதரன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆங்கிலத்தில் உரையாற்றியிருக்கின்றார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உண்டு.

அவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்து, ஆங்கிலம் தெரிந்திருந்தும், தமக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று கூறியதன் மூலம் இந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவர் அவமதித்துள்ளார் எனப் பிறிதொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாம் தொடுக்க எண்ணியுள்ளோம். ஆகவே குறித்த விடயத்தை நீதிமன்றப் பதிவுகளில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினார்.

அவரது கோரிக்கையை ஏற்ற நீதியரசர்கள் அந்த விடயங்களை நீதிமன்றப் பதிவுகளில் தவறாது சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டனர்.


அத்துடன் அங்கு குறுக்கிட்ட நீதியரசர்கள் இந்த வழக்கில் தம் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளை நியமித்து நீதிமன்றுக்கு எதிர்மனுதாரர் அனந்தி சசிதரன் சமர்ப்பித்த 'புரொக்ஸி' பத்திரத்தை பரிசீலனைக்கு எடுக்க உத்தரவிட்டதுடன் குறித்த புராக்ஸி ஆங்கிலத்தில் நிரப்பப்பட்டிருந்தமை கண்டு தெளிவாகியது.

சட்டத்தரணி ஒருவரை நியமிக்கும் புராக்ஸி எனப்படும் அப்பத்திரத்தினை அனந்தி சசிதரன் ஆங்கில மொழியில் நிரப்பியிருந்தமையை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் தனது சட்டத்தரணியைத் தாம் நியமிப்பது பற்றிய ஆவணத்தை ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கும் எதிர்மனுதாரர், தமக்கு ஆங்கில மொழி தெரியாதமையால் குற்றவாளியா, சுற்றவாளியா என்றுரைக்க முடியாமல் உள்ளது என்று கூறும் ஆட்சேபனையை ஏற்க முடியாது என மறுத்துரைத்தனர்.


Read more...

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உல்லாசம் அனுபவிக்கின்றார்களாம்! சொல்றார் சங்கரியார்.

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு மக்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உல்லாசமாக இருக்கின்றார்கள் என்று சாடியுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவிற்கான கூட்டம் 18.09.2018 செவ்வாய்க் கிழமை அன்று; நாச்சிமார் கோவிலடி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு வீ. ஆனந்தசங்கரி அவர்கள் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவும்:

மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி அவர்களே போராடவேண்டுமென்றால் மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் இவர்கள் எதற்காக.?

மக்கள்தான் வாக்குப் பிச்சை போட்டு பாராளுமன்ற உறுப்பனர்களின் உல்லாச வாழ்விற்கு வழிசமைத்துக் கொடுத்துள்ளார்கள். மக்கள் தான் எஜமானர்கள். ஆனால் அந்த உணர்வு சிறிதுமின்றி இவர்கள், மக்களின் போராட்டத்தை, வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வாக்களிப்பதும் மக்கள், தங்கள் பிரச்சினைகளுக்காக போராடுவதும் மக்கள் என்றால் இவர்கள் எதற்காக?. முள்ளிவாய்க்கால் பகுதியில் எமது மக்களின் படுகொலைகளையே வேடிக்கைப் பார்த்தவர்களுக்கு இது ஒன்றும் பெரிதல்லவே.

இந்த நிலைமையை தொடர்ந்தும் நீடிக்க விடாமல், நாம் அனைவரும் நான் பெரிது நீ பெரிது என்று பாராமல் நாடும் மக்களும் பெரிது என நினைத்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு மக்களுக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் உள்ள மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும்; உள்ளுராட்சி சபைகளில் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போனஸ் ஆசனங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், சுழற்சி முறையில் ஆசனங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும், உடன்படாதவர்கள் மீது ஏற்கனவே கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக அவர்களை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய உறுப்பினர்களை உள்ளுராட்சி சபைகளுக்கு நியமனம் செய்ய வேண்டும் என்ற முடிவும் குறித்த ஒன்றுகூடலில் எடுக்கப்பட்டுள்ளன.


Read more...

திருட்டு வழக்கில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அவரின் மகன் உள்ளிட்ட நால்வருக்கு பிணை.

சவுதி அரேபியாவின் நிதியுதவியின் கீழ் தனியார் பல்கலைக்கழகமொன்று நிர்மாணிக்கப்படுகின்றது. இதன் கட்டுமானப் பணிகள் நிறுவனமொன்றிற்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், குறித்த கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு அத்துமீறி பிரவேசித்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ், அவரின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட நால்வர் அங்கிருந்த 150 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைக் திருடிச்சென்றதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு நேற்று முன்தினம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகளான இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட நால்வரையும் தலா 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 25 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்வதற்கு நீதவான் ஏ.சி. ரிஸ்வான் அனுமதித்துள்ளார்.

அத்துடன், பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதாக இருந்தால் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கிய பின்னர் செல்லலாம் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு பிரதிவாதிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இதன்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் நீதிமன்றத்தால் கவனம் செலுத்தப்படுமெனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நால்வரையும் கைது செய்ய வேண்டுமென தெரிவித்து பொலிஸாராலோ நீதிமன்றத்தாலோ கட்டளை பிறப்பிக்கப்படவில்லை என கூறி பிரதிவாதிகளால் பிணை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Thursday, September 20, 2018

பயங்கராவாதம் தோற்கட்டிக்கப்பட்டபோதும், பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையாம். சம்பிக்க நீலிக்கண்ணீர்.

பிரிவினைவாத பயங்கரவாத செயற்பாடுகளை போர் ரீதியாக தோற்கடிக்கப்பட்டு அடுத்த வருடம் மே மாதத்துடன் 10 ஆண்டுகள் பூர்த்தியாக உள்ளது. எனினும் இந்த பிரச்சினை காரணமாக ஏற்பட்ட சில சட்ட ரீதியான பிரச்சினைகள், சமூக ரீதியான பிரச்சினைகள், சர்வதேச பிரச்சினைகள் மற்றும் தீர்க்கப்படக் கூடிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் ஒன்றோடு ஒன்று சிக்கி, சிக்கலாக முன்னோக்கி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்காண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து பேசுகையில்:

யுத்தம் என்ற போர்வையில் தனிப்பட்ட தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக துரிதமாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம், தம்மை பயங்கரவாதிகளாக ஏற்றுக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய, ஆயுதங்களை கையளித்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கி விடுவித்தது.

மேலும் பல விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சுமார் 60 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளது.

இதனை தவிர கடந்த காலம் முழுவதும் போருடன் சம்பந்தப்பட்ட சில சம்பவங்கள் தொடர்பாக இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராகவும் அவ்வப்போது வழக்குகள் தொடரப்பட்டடு, தண்டனை வழங்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. போருடன் சம்பந்தப்படாத தனிப்பட்ட குற்றச் செயல்களும் நடந்துள்ளன.

ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் போன்ற சம்பவங்கள் தொடர்பாக பாதுகாப்பு படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமையானது பாதுகாப்பு தரப்பினர், சமூகம் மற்றும் சர்வதேச ரீதியில் ஒரு குழப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதை பார்க்க முடிகிறது.

இந்த விடயம் தொடர்பில் நாம் சரியான கொள்கைகளை பின்பற்றாத காரணத்தினால், குறிப்பாக சர்வதேச அமைப்புகள் நாம் சட்டத்தை சரியாக அமுல்படுத்தவில்லை என்று கூறுகின்றன. இதனை நாம் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டு சுயாதீனமாக சட்டத்தை அமுல்படுத்தினால் என்னவாகும்.

தம்மை புலிகள் என்று ஏற்றுக்கொண்டு, புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யப்பட்ட புலிகளின் உறுப்பினர்களை விடுதலை செய்ய நாடாளுமன்றத்தில் சட்டமூலங்கள் கொண்டு வரப்படவில்லை என்பதுடன் மகிந்த ராஜபக்ச, அமைச்சரவையின் அனுமதியையும் பெறவில்லை. இதனால், அவர்கள் அனைவரையும் மீண்டும் கைதுசெய்ய நேரிடும். விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டவிரோதமான அமைப்பு என்பதே இதற்கு காரணம்.

விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையிலும் சர்வதேசத்திலும் தடைசெய்யப்பட்ட அமைப்பு. அந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் சரணடைந்த நிலையில், எந்த சட்ட பின்னணியும் இல்லாது விடுதலை செய்யப்பட்டால், சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை என்றால், விடுதலை செய்யப்பட்ட அந்த 12 ஆயிரம் பேரை மீண்டும் கைதுசெய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.

முக்கியமாக விடுதலைப் புலிகளின் உயர் மட்ட தலைவர்களாக இருந்த, ராம், நகுலன், கே.பி போன்றோர் தற்போது சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்.

அண்மையகாலமாக சிற்சில சம்பவங்கள் காரணமாக சிலர் கைதுசெய்யப்படுகின்றனர். எனினும் இவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. சட்டம் அனைவரும் சமமான முறையில் அமுல்படுத்தப்படுகிறது என்றால், அதேவிதமாக அமுல்படுத்தப்பட வேண்டும். எனினும் செயற்பாட்டு ரீதியாக தற்போது அப்படி நடப்பதில்லை.

அதேபோல் சில வெளிநாடுகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்க வேண்டாம் என்று கூறுகின்றனர்.

எனினும் படையினருக்கு தண்டனை வழங்குமாறு கூறுகின்றனர். காணாமல் போனோரின் அமைப்பு போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்துகின்றனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், படையினருக்கு தண்டனை வழங்குமாறு கோருகின்றனர்.

அதேநேரத்தில் படையினர் வேட்டையாடப்படுவதாக கூறுகின்றனர். எந்த வகையிலும் சட்டத்தை அமுல்படுத்த முடியாது. தனிப்பட்ட குற்றச் செயல்களுக்காக படையினரை கைதுசெய்ய முடியாது என்ற கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சர்வதேச ரீதியில் மிகவும் மடத்தனமான செயல்கள்.

இந்த பிரச்சினைகளை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்த பிரச்சினைகள் காரணமாக இன்னும் பல தசாப்தங்களுக்கு எம்மால் முன்னேறிச் செல்ல முடியாது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் போராட்டம் மட்டுமே நடக்கவில்லை. மக்கள் விடுதலை முன்னணியினரின் போராட்டமும் நாட்டில் நடந்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் இந்த போராட்டமும் பயங்கரவாத செயல்களே. இறுதியில் என்ன நடந்தது. இந்த போராட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் உயிரிழந்தனர். சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

போராட்டத்தில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளை போல் மக்கள் விடுதலை முன்னணியினரும் உயிருடன் சுதந்திரமாக இருக்கின்றனர். உத்தியோகபூர்வமற்ற ஒருவகையிலான பொது மன்னிப்பை மக்கள் விடுதலை முன்னணியினர் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் ரோஹன விஜேவீரவின் மனைவி சித்ராங்கனி விஜேவீர தனது கணவர் சட்டவிரோதமாக கொலை செய்யப்பட்டார் என்று முதல் காலத்தில் நீதின்றத்திற்கு சென்று வழக்கு தொடரவில்லை. இந்த கொலையை நேரில் பார்த்த மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் பிரதிநிதிகள் இருந்தனர்.

எனினும் முதலில் மக்கள் விடுதலை முன்னணியினர் அப்படி வழக்கு எதனையும் தொடரவில்லை. இதன் மூலம் அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு வகையில் பொது மன்னிப்பை வழங்கியுள்ளதை இது காட்டியது. மக்கள் விடுதலை முன்னணியும் தாம் செய்த தவறை ஏற்றுக்கொண்டது போல் அது ஆகிவிட்டது.

தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி மட்டுமல்ல, இடதுசாரி அமைப்புகள், பலர் ஆயுதங்களை ஏந்தினர். கருடன் (உகுஸ்ஸா) போன்ற அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு கொலை செய்தனர். அவர்களும் சுதந்திரமாக இருக்கின்றனர். சிலர் இறந்து போயினர்.

பலர் அரசியலில் முக்கியமான அதிகாரமிக்க இடங்களில் இருக்கின்றனர். இவர்கள் சம்பந்தமாகவும் சட்டங்கள் அமுல்படுத்தப்படவில்லை. அவர்களுக்கும் ஒரு வகையில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாம் மக்கள் விடுதலை முன்னணியை மறந்து விட்டோம். அந்த முன்னணி ஜனநாயக வழிக்கு திரும்பி விட்டது.

பழைய காரணங்களுக்காக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனை நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.

இதனை போலவே தென் ஆபிரிக்காவில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு மூலம் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது. அண்மையில் கொலம்பியாவின் பேர்க் கெரில்லா அமைப்பு ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்பியது.

அரசாங்கம் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கியது. பேர்க் அமைப்பு உலகில் எஞ்சியிருந்த இஸ்லாமிய அமைப்பு அல்லாத ஒரே ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பு.

இதனால், ஜனாதிபதி, பிரதமர், அரசியல் கட்சிகள், தேசிய மற்றும் சர்வதே ரீதியில் இந்த விடயங்கள் தொடர்பில் அக்கறை காட்டும் மனித உரிமை அமைப்புகளுக்கு நாம் சில யோசனைகளை முன்வைக்க விரும்புகிறோம்.

பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும், தோற்கடிக்க முடியும் என நாம் கூறும் போது, சிலர் காலில் பலம் இல்லாதவர்கள் போல் செயற்பட்டனர். நாங்கள் மட்டுமே பலமாக கால்களை ஊன்றி போராட்டம் நடத்தினோம்.

எனினும் இந்த பிரச்சினையை நீடித்த ஒரு பிரச்சினையாக இருந்தால்,ஆறாத புண்ணாகவே இருக்கும். இதன் மூலம் சமூகத்திற்கு எந்த நன்மையான முன்னேற்றமும் கிடைக்க போவதில்லை.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். படையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பை சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு தரப்பினருக்கு உதவி போன்ற குற்றச்சாட்டில் தமிழ் அமைப்புகளை சேர்ந்த சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரினதும் குற்றங்களை தரம்பிரிக்க வேண்டும். இதில் போர் செயற்பாடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எந்த அடிப்படையில் அந்த குற்றத்தை செய்தனர் என்பதை கண்டறிய வேண்டும். தனிப்பட்ட தேவையை நிறைவேற்ற செய்தார்களா, கப்பம் பெற செய்தார்களா, அச்சுறுத்த செய்தார்களா என்று அறிய குற்றங்களை தரம் பிரிக்க வேண்டும்.

போரை அடிப்படையாக கொண்டு இலங்கை பாதுகாப்பு படைகளின் உறுப்பினர்கள், படையினருடன் இணைந்து செயற்பட்ட தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தால், அவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.

அதேபோல், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் தமது தனிப்பட்ட தேவைக்காக அல்லாமல் போர் நோக்கத்திற்காக குற்றங்களை செய்திருந்தால், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுங்கள்.

விடுதலை செய்யப்பட்டுள்ள 12 ஆயிரத்து 600 பேருக்கும் மேலானவர்கள், பெரிய குற்றங்களை செய்தவர்கள் வெளியில் இருக்கின்றனர் என்பதே இதற்கு காரணம். சிலர் அமைதியான வாழ்ந்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் தசாப்த காலங்களாக தடுத்து வைத்திருப்பதில்லை பிரயோசனம் இல்லை. இவர்களையும் பாதுகாப்பு தரப்பினருடன் விடுதலை செய்ய வேண்டும்.

அதேவளை தனிப்பட்ட நோக்கத்திற்காக எவராவது பிள்ளைகளை கடத்திச் சென்றிருந்தால், கொலைகளை செய்திருந்தால், பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்தால் அல்லது வேறு குற்றங்களை செய்திருந்தால், அவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்தும் பிரச்சினையை அடுத்து முடித்துக்கொள்ள வேண்டும். இவற்றின் பின்னால் தொடர்ந்தும் சென்றுக்கொண்டிருப்பதில் பயனில்லை.

இப்படியான தேசிய பொது மன்னிப்பை வழங்க முழு நாடும் ஒன்றாக இணைய வேண்டிய நேரமிது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, தமிழ்,முஸ்லிம் கட்சிகள், தேசிய மற்றும் சர்வதேச தரப்பினர் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரச்சினையை தீர்க்க இந்த இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட பின்னர், மீண்டும் அந்த பிரச்சினையை பற்றி பேசக் கூடாது. தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அமைப்புகள் இந்த போரில் நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து பேசுவதை முற்றாக மறந்து விட்டு, எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

அதனை விடுத்து, இவர்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் மீண்டும் மீண்டும் அந்த பிரச்சினைகளை பற்றி பேசினால், விடுதலை மற்றும் அதனுடான செயற்பாடுகளுக்கு எந்த பிரயோசனமும் ஏற்படாது. தேசிய பொது மன்னிப்பை வழங்கி, 100 பேருக்கும் குறைவான போருடன் சம்பந்தப்பட்ட இவர்கள்

ஜனநாயகத்துடன் கலக்க இடமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த விடயம் சம்பந்தமாக முக்கியத்துவத்தை வழங்கி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் கிடைத்த பின்னர் நாட்டின் எதிர்காலத்திற்கான பயணத்தை உருவாக்கி இருக்க முடியும். போருக்கு பின்னரும் இவ்வாறான அரசியல் ரீதியான பயணத்தை முன்னெடுக்க சந்தர்ப்பம் இருந்தது. அவை கைவிட்டு போயின.

தற்போது கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வெளிப்படையாக செயற்பாடுகள் மூலம் ஒவ்வொருவரும் தமது தவறுகளை உணர்ந்து, மன்னிப்பு கேட்டு, மன்னித்து, கடந்த கால சம்பவங்கள் மூலமான பாடங்களை கற்று, இறந்த காலத்தை மன்னித்து எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம் என நாம் முழு நாட்டுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் யோசனைகளை முன்வைக்கின்றோம் எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளருமான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Wednesday, September 19, 2018

மக்கள் மனங்களில் மாற்றம் வரவிட்டால், நாட்டில் அரசியலில் எந்த மாற்றமும் இடம்பெறாது. சுனில் ஹந்துன்நெத்தி

நாட்டின் அரசியலில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டுமானல் அதற்கான மாற்றம் மக்கள் மனங்களிலிருந்தே வரவேண்டும் என ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மாத்தறை - வெலிகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தலைவர்கள் இல்லை என்பதா இன்று நாட்டில் உள்ள பிரச்சினை?. மைத்திரி நேரடியான தீர்மானங்களை எடுப்பதில்லை என்றும் அதற்கு அவருக்கு முதுகெலும்பில்லை என்றும் சாடியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபாலவுக்கு ஞாபக மறதி என்றும் அவர் பலவற்றை பத்திரிகைகளில் பார்த்தே அறிந்து கொள்கிறார் என்றும் நகைத்துள்ளார்.

இதனால், நாடு அராஜக நிலைக்கு சென்றுள்ளது. நேரடியாக தீர்மானங்களை எடுக்கக்கூடிய, தூக்கு தண்டனையை கொண்டு வரக் கூடிய ஒருவர் பதவிக்கு வந்தால், பிரச்சினைகளை தீர்க்க முடியும் என சிலர் கூறுகின்றனர்.

அதேபோல் கொள்ளையிட்டால் பரவாயில்லை, பழையவர்களை மீண்டும் கொண்டு வந்து நாட்டை முன்னேற்றலாம், முன்னோக்கி கொண்டு செல்லலாம் என சிலர் நினைக்கின்றனர்.

பாகிஸ்தானில் போல் கிரிக்கெட் வீரரை நாட்டின் தலைவராக கொண்டு வந்து இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என மேலும் சிலர் நினைக்கின்றனர்.

அரசியலில் எதனையும் அறியாத புதியவரை கொண்டு வந்து நாட்டை முன்னேற்றலாம் என மேலும் சிலர் நினைக்கின்றனர். சமூக ஊடகங்களில் இப்படியான சிலர் கூச்சல் போட்டு வருகின்றனர்.

மரண நிதி உதவி சங்கத்தில் தலைவராக கூட பதவி வகிக்காத அரசியல் பற்றி எதனையும் அறியாத ஒருவர் தான், நாட்டின் தலைவராக வந்தால், நாட்டின் கடனை செலுத்தி விடுவேன் என்கிறார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மக்கள் மாறாமல், அந்த மாற்றம் ஏற்படாது எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.


Read more...

மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்! தாஹிர் நூருல் இஸ்ரா

மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை திருமதி தாகிர் நூருள் இஸ்ரா மேற்கொண்டு வருகின்றார். சுமார் ஒரு மணி நேரம்கொண்ட விழிப்புணர்வு காணொளி ஒன்று இங்கே தரவேற்றப்பட்டுள்ளது. எவ்வாறு புற்றுநோய் உருவாகின்றது, புற்றுநோயுடன் எவ்வாறு வாழ்வது, தடுப்பதற்கான வழிகள், சிகிச்சைகளை தொடர்பில் குறித்த காணொளியில் விரிவாக பேசப்பட்டுள்ளது.

இக்காணொளியை பார்வையிடுபவர்கள் அதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.




*உங்கள் வீட்டு பெண்களில் கவனம் எடுங்கள்.* 50 வயதுகளில் ஒரு பெண். “என்ன வருத்தம்” “ நெஞ்சுல கட்டி”

அவரைப் பரிசோதித்து முடித்த போது, அவருக்கு மார்பில் கட்டி ஏற்பட்டு இன்றுடன் 9 மாதங்கள். இவர் வைத்தியசாலைக்கு வந்தது 4 நாட்களுக்கு முன்னால்தான். கேன்சர் அக்குளுக்குள்ளும் பரவி இருந்தது.

எனது பரிசோதகர் ஒரு பேராசிரியர். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு கடைசியாக ஒரு கேள்வி கேட்டார்.

“ இவருடைய எதிர்கால உடல் நிலை எவ்வாறு அமையும்”
“ ரோட்டிங்ஹாம் ஸ்கோர் படி ......”
“ நீ எந்த ஸ்கோர பாவிப்பியோ தெரியா, இந்த நிலமையில இருந்து இந்த பேஷன்டுக்கு பூரண சுகம் கிடைக்குமா? கிடைக்காதா?”
“ கிடைக்காது சேர்”

பயிற்சி வைத்தியராய் இருந்த நேரம் 45 வயது பெண். வாசலில் சறுக்கி விழுந்திருக்கிறார். X rayஇல் முதுகெலும்பு நொறுங்கி இருந்தது.

அன்று ரவுன்ட்சுக்கு வந்த orthopaedic surgeon இடம் X rayஐ காட்டினேன்.

“ இந்த வயசில இப்படி உடையாது. அப்பிடி உடையுது என்டா அது abnormal bone. உடம்புல ஏதாவது கட்டி இருக்கா என்டு பாரு”

“உங்கட உடம்புல எங்கயாவது கட்டி இருக்கா?”

“இல்லியே”

அவரை முழுமையாக பரிசோதித்த போது , இடது மார்பில் டெனிஸ் பந்து அளவில் ஒரு கட்டி இருந்தது.

“இந்தா கட்டி இருக்கே!”

“அது ஒரு 6 மாசமா இருக்கு”

“ ஏன் காட்ட இல்ல?”

“ மச்சான் வெளிநாட்ல, எனக்கும் வெட்கமா இருந்திச்சி”

இந்த மார்புக் கட்டிதான், அவருடைய முள்ளந்தண்டுக்கு பரவி இருந்தது. இவ்வாறு மார்புப் புற்று நோய், முள்ளந்தண்டுக்கு பரவினால், அவர்களின் சராசரி ஆயுட்காலம் 24 மாதங்கள். இந்நேரம் அவர் இறந்திருக்க கூடும்)

எனது சத்திரசிகிச்சை பயிற்சியில் முதல் வருடம். களுபோவில ஹொஸ்பிடலில் பல பேஷன்ட்களை கண்டிருக்கிறேன். 15-20 வருடங்களுக்கு முன்னால் மார்புப் புற்று நோய்க்கு சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வருடத்திற்கு ஒரு முறை கிளினிக் வந்து சென்று கொண்டிருந்தார்கள்.

அண்மையில் எனதூரைச் சேர்ந்த 38 வயதான ஒரு பெண். திடீரென சுவாசிக்க கஷ்டப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் இடது மார்பு முழுவதும் கல்லுக் கட்டியாய் இருந்தது.

விசாரித்ததில் கட்டி ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேல். ஏன் காட்டவில்லை எனக் கேட்டதற்கு அவருடைய பதிலும் “வெட்கம்”. இரண்டு மாதங்களில் அவருடைய உயிர் பிரிந்தது.

அதிக குழந்தைகள் பெறுவதும், குழந்தைகளுக்கு தாய்ப் பாலூட்டுவதும், மார்புப் புற்று நோயிலிருந்து பாதுகாப்பளிக்கும்.

உங்களது உயிர் உங்களது வெட்கத்தை விட மேலானது. அருகிலுள்ள ஒரு பெண் வைத்தியரிடமாவது, உங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை காட்டுங்கள்.

Dr. Ahamed Nihaj
🔸🔸🔸🔸
*மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு*
Video
https://www.youtube.com/watch?v=8Xce7PbibA8
Breast Cancer Awareness
Counselor Thahir Noorul Isra

Contact 0094776231276
to organize such events in your area.
Thahir Noorul Isra
BA, MSW(M&P), M. Phil (Psy.SW), Dip in counselling & HR.
Awareness on breast cancer among women

மார்பக புற்றுநோய் வேகமாக சமுதாயத்தின் மத்தியில் பரவிவருகிறது . எனவே நோய்க்கான அறிகுறிகளையும் சிகிச்சை முறைகளையும் அறிந்திருப்பது அவசியமாகும்.

இந்த வீடியோ மரபாக புற்று நோய் சம்பந்தமாக பொதுமக்களுக்கு சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்..

எனவே இந்த வீடியோவை பெண்களுக்கு விசேடமாக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் திரையில் காண்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தயவாய் கேட்டுக்கொள்கிறோம் .



Read more...

புலிகள் தோற்கடிக்கப்படுவதை காண்பதற்கு ஆவலுடன் இருந்தேன். திரைப்பட இயக்குனர் ஜூட் ரத்னம்

இலங்கையில் இறுதிப் போர் இடம்பெற்ற காலத்தில் எல்.டி.டி.ஈ தோற்கடிக்கப்படுவதை பார்க்க என்றுதான் விரும்பியதாக திரைப்பட இயக்கனர் ஜூட் ரட்ணம் தெரிவித்துள்ளார்.; பிபிசி உலக சேவையுடனான நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

´டீமன்ஸ் இன் பெரடைஸ்´ என்ற தனது திரைப்படத்தின் மூலம் இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஜூட் ரத்னம் கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போதான விடுதலைப் புலிகளிகளின் கொடூரமான செயல்கள் ஜூட் ரத்னம் விமர்சம் செய்துள்ளார்.

´சுவர்க்கத்தில் உள்ள பேய்கள்´ எனும் ´டீமன்ஸ் இன் பெரடைஸ்´ என்ற அவரின் இந்த திரைப்படத்தில் எல்.டி.டி.ஈ. அமைப்பை விமர்சனம் செய்துள்ளதுடன், யுத்த காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் இனவாத குழுக்கள் சம்பந்தமான விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2017 ல் ´டீமன்ஸ் இன் பெரடைஸ்´ என்ற திரைப்படம் விமர்சகர்களின் வரவேற்பை பெற்றிருந்ததுடன், இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான ஜூட் ரத்னம் இயக்கிய முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தயாரித்ததற்காக தனக்கு சிலர் துரோகி பட்டம் வழங்கக்கூடும் என்று கூறுகிறார் ஜூட் ரத்னம் முன்னர் கூறியிருந்தார்.

தனது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாக இலங்கை உள்நாட்டுப் போரை சித்தரித்து 90 நிமிட ஆவணப் படமாக தயாரிக்கப்பட்டதே ´டீமன்ஸ் இன் பெரடைஸ்´ என்ற திரைப்படம்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com